டிசம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும்டிசம்பரில் சில்லரை பணவீக்கம் அதிகரிக்கும் ... காய்கறிகள், பழங்கள் விலை உயர்வால்  நாட்டின் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு காய்கறிகள், பழங்கள் விலை உயர்வால் நாட்டின் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு ...
மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ரூ.3,500 கோடி பினாமி சொத்துகள் முடக்கம் கடைகள், நகைகள், வாகனங்களும் தப்பவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
00:58

புதுடில்லி:‘இது­வரை, 3,500 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான பினாமி சொத்­து­கள் முடக்­கப்­பட்டு உள்ளன’ என, மத்­தியநிதி­ய­மைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
அதன் விப­ரம்:வரு­மான வரித்­துறை, 900 வழக்­கு­களில், 3,500 கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான, பினாமி சொத்­து­களை முடக்கி உள்­ளது. இதில், அசையா சொத்­து­கள் மதிப்பு, 2,900 கோடி ரூபாய்.பினா­மி­யாக செயல்­பட்­டோ­ரின் நிலம், பிளாட்­டு­கள், கடை­கள், நகை­கள், வாக­னங்­கள், குறித்த கால வைப்பு நிதி கணக்­கு­கள் உட்­பட, வங்கி டிபா­சிட்­டு­கள் முடக்­கப்­பட்டு உள்ளன.
ஐந்து வழக்­கு­களில், 150 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­கள் முடக்­கப்­பட்டு உள்ளன. இதில், ஒரு ரியல் எஸ்­டேட் நிறு­வ­னம், பினா­மி­தா­ரர்­கள் பெய­ரில் வாங்­கிய, 110 கோடி ரூபாய் மதிப்­புள்ள நில­மும் அடங்­கும்.பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யின் போது, இரு நிறு­வ­னங்­கள், அவற்­றின் ஊழி­யர்­களை பினா­மி­யாக்கி, பல்­வேறு வங்­கிக் கணக்­கு­களில், செல்­லாது என அறி­விக்­கப்­பட்ட, 39 கோடி ரூபாய் உயர் மதிப்பு கரன்­சி­களை டிபா­சிட் செய்­துள்ளன.
வாகன சோத­னை­யின் போது, வரு­வாய் விப­ரம் தெரி­விக்க திண­றிய நப­ரி­டம் இருந்து, 1.11 கோடி ரூபாய் பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ளது.வரு­மான வரித்­துறை, பினாமி சொத்­து­களை கண்­ட­றிந்து, தீவிர நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. இதற்­காக, 2017 மே மாதம், புல­னாய்வு இயக்­கு­ன­ரங்­களின் கீழ், 24 பினாமி தடுப்பு படை­கள் அமைக்­கப்­பட்டு உள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
7 ஆண்டு சிறை
பினாமி பரி­வர்த்­தனை தடுப்பு திருத்த சட்­டம், 2016 நவ., 1 முதல் அம­லுக்கு வந்­தது.இந்த சட்­டத்­தின்­படி, பினா­மி­யாக செயல்­பட்­டால், ஏழு ஆண்­டு­கள் வரை சிறை தண்­டனை, சொத்து மதிப்­பில், 25 சத­வீ­தம் அப­ரா­தம் விதிக்க முடி­யும். இத்­து­டன், சொத்தை பறி­மு­தல் செய்­ய­வும் அதி­கா­ரம் அளிக்­கப்­பட்டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)