பதிவு செய்த நாள்
12 ஜன2018
00:58
புதுடில்லி:‘இதுவரை, 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பினாமி சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன’ என, மத்தியநிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:வருமான வரித்துறை, 900 வழக்குகளில், 3,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான, பினாமி சொத்துகளை முடக்கி உள்ளது. இதில், அசையா சொத்துகள் மதிப்பு, 2,900 கோடி ரூபாய்.பினாமியாக செயல்பட்டோரின் நிலம், பிளாட்டுகள், கடைகள், நகைகள், வாகனங்கள், குறித்த கால வைப்பு நிதி கணக்குகள் உட்பட, வங்கி டிபாசிட்டுகள் முடக்கப்பட்டு உள்ளன.
ஐந்து வழக்குகளில், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதில், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், பினாமிதாரர்கள் பெயரில் வாங்கிய, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலமும் அடங்கும்.பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, இரு நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களை பினாமியாக்கி, பல்வேறு வங்கிக் கணக்குகளில், செல்லாது என அறிவிக்கப்பட்ட, 39 கோடி ரூபாய் உயர் மதிப்பு கரன்சிகளை டிபாசிட் செய்துள்ளன.
வாகன சோதனையின் போது, வருவாய் விபரம் தெரிவிக்க திணறிய நபரிடம் இருந்து, 1.11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.வருமான வரித்துறை, பினாமி சொத்துகளை கண்டறிந்து, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, 2017 மே மாதம், புலனாய்வு இயக்குனரங்களின் கீழ், 24 பினாமி தடுப்பு படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
7 ஆண்டு சிறை
பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த சட்டம், 2016 நவ., 1 முதல் அமலுக்கு வந்தது.இந்த சட்டத்தின்படி, பினாமியாக செயல்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, சொத்து மதிப்பில், 25 சதவீதம் அபராதம் விதிக்க முடியும். இத்துடன், சொத்தை பறிமுதல் செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|