பதிவு செய்த நாள்
14 ஜன2018
01:26
இந்தியாவில், குர்கானில் செயல்படும், ‘டுவென்டி டூ மோட்டர்ஸ்’ நிறுவனம், ‘இ – ஸ்கூட்டர்’ எனப்படும், ‘பேட்டரி’யால் இயங்கும், ‘பிளோ’ என பெயரிடப்பட்டுள்ள, ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது.
பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில், அதிக நிறுவனங்கள், வெவ்வேறு சலுகைகளுடன் களம் இறங்குவதால், நிர்ணயித்த விலையை விட, பாதி விலைக்கு ஸ்கூட்டரை விற்க, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது, ‘ஹீரோ மோட்டோ கார்ப்’ நிறுவனத்தின் துணையுடன் செயல்படும், ‘ஏத்தர்’ நிறுவனத்தின், 1 லட்சம் ரூபாய் ஸ்கூட்டருக்கு போட்டியாக, 60 ஆயிரம் ரூபாயில், ‘பிளோ’வை அறிமுகப்படுத்த முடிவெடுத்து உள்ளது. டில்லியில், பிப்ரவரியில் நடக்க உள்ள, ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்காட்சியில், இது களம் காண உள்ளது. ஏத்தர் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள், விரைவில், இ – ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த உள்ளதால், ‘டுவென்டி டூ மோட்டர்ஸ்’ முந்திக்கொண்டு உள்ளது.
பொதுவாக, இ – ஸ்கூட்டர்களில் உள்ள, ஜி.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. இதில், இரு பேட்டரிகள் வைக்கலாம். அவற்றை ஒரு முறை, ‘சார்ஜ்’ செய்தால், 80 கி.மீ., தொலைவிற்கு ஓடும். பேட்டரியின் விலை அதிகம் என்பதால், இரண்டாவது பேட்டரியை வைக்க விரும்புவோருக்கு, அதை, ‘லீஸ்’ அடிப்படையில் தர, அந்நிறுவனம் முடிவெடுத்து உள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|