பதிவு செய்த நாள்
15 ஜன2018
01:46
வரி சலுகை பெற உதவும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக திகழும் வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டங்கள் குறித்து அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்:டேக்ஸ் சேவிங் பிக்சட் டிபாசிட் என குறிப்பிடப்படும் வரி சேமிப்பு வைப்பு நிதி திட்டங்களில் தனிநபர்கள் மற்றும் ஹிந்து கூட்டு குடும்பங்கள் (எச்.யூ.எப்.,) மட்டுமே முதலீடு செய்யலாம். இதற்கான குறைந்தபட்ச தொகை வங்கிகளுக்கு இடையே மாறுபடலாம்.
இந்த வைப்பு நிதிகள் ஐந்து ஆண்டு லாக் இன் காலம் கொண்டவை. அதற்கு முன் விலக்கி கொள்ளவோ, இவற்றுக்கு எதிராக கடன் பெறவோ முடியாது. பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள் மூலம் இதில் முதலீடு செயலாம். கூட்டுறவு வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மூலம் முதலீடு செய்ய முடியாது.
அஞ்சல் அலுவலகங்களில் செய்யப்படும் ஐந்து ஆண்டு டைம் டிபாசிட் திட்டங்களுக்கும், வருமான வரி சட்டம், 80 சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கோரலாம். அஞ்சலக வைப்பு நிதியை ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து இன்னொரு அலுவலகத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.வைப்பு நிதியை தனியாக அல்லது கூட்டாக மேற்கொள்ளலாம். கூட்டாக மேற்கொள்ளும் போது, கணக்கில் முதல் பெயராக உள்ளவர் மட்டுமே வரி விலக்கு கோர முடியும். நாமினேஷன் வசதியும் உண்டு.
வட்டி வருமானத்திற்கு டி.டீ.எஸ்., வரி பொருந்தும். இதை தவிர்க்க தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமகன்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. இது, வரி சேமிப்பு வைப்பு நிதிக்கும் பொருந்தும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|