பதிவு செய்த நாள்
16 ஜன2018
10:47
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடனும் புதிய உச்சத்துடன் ஆரம்பமாகின. ஆனால் சற்று நேரத்தில் சரிந்ததால் பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 92.52 புள்ளிகள் உயர்ந்து 34,936.03-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 20.25 புள்ளிகள் உயர்ந்து 10,761.80-ஆகவும் வர்த்தகமாகின.
கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை 41 சதவீதம் உயர்ந்து 14.88 பில்லியன் டாலராக உள்ளது. இதன்காரணமாக பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 21.84 புள்ளிகள் உயர்ந்து 34,865.35-ஆகவும், நிப்டி 2.80 புள்ளிகள் சரிந்து 10,738.75-ஆகவும் வர்த்தகமாகின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|