பதிவு செய்த நாள்
18 ஜன2018
00:38
மும்பை : மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, நேற்று முதன்முறையாக, 35 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, முதன்முறையாக, 10,800 புள்ளிகளை தாண்டியது. 2017 டிசம்பரில், சென்செக்ஸ் முதன்முறையாக, 34 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. இதையடுத்து, 16 வர்த்தக தினங்களில், மேலும், 1,000 புள்ளிகள் உயர்ந்து, புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ், 310.77 புள்ளிகள் உயர்ந்து, 35,081 புள்ளிகளில் நிலை கொண்டது. நிப்டி, 88.10 புள்ளிகள் அதிகரித்து, 10,788 புள்ளிகளில் நிலை பெற்றது.
கார்ப்பரேட் நிறுவனங்களின், சிறப்பான மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கை, நடப்பு நிதியாண்டில், அரசின் கூடுதல் கடன் தேவை குறையும் என்ற தகவல் ஆகியவை, பங்கு முதலீடுகள் அதிகரிக்க துணை புரிந்துள்ளன. குறிப்பாக, வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் விலை உயர்வை சந்தித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|