பதிவு செய்த நாள்
19 ஜன2018
05:37
புதுடில்லி, ஜன. 19–‘‘ஆயத்த ஆடைகள் துறையின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்க, மத்திய அரசு, குழு ஒன்றை அமைத்துள்ளது,’’ என, மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர், அஜய் தம்தா தெரிவித்து உள்ளார்.அவர், டில்லியில், சர்வதேச ஆடைகள் கண்காட்சியின் துவக்க விழாவில் பேசியதாவது:ஆடைகள் துறை, தற்போது கடுமையான சவால்களை சந்திக்கிறது. சர்வதேச சந்தையில், வங்கதேசம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் போட்டியை, இந்திய நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன.இதை கருதி, ஆயத்த ஆடைகள் துறையின் வளர்ச்சிக்கு தேவையான ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.இதற்காக, தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, ஆயத்த ஆடைகள் துறையின், அனைத்து பிரிவினருடன் கலந்து பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை உருவாக்கும்.இக்குழு அளிக்கும் பரிந்துரைகளை, மத்திய ஜவுளி அமைச்சகம் செயல்பாட்டிற்கு கொண்டு வரும்.இதன் மூலம், ஆயத்த ஆடைகள் துறை, சர்வதேச போட்டியை சமாளித்து வளர்ச்சி காணும்.கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில், 20 கோடி டாலர் வர்த்தகம் நடந்தது. இந்தாண்டு, இதை விட அதிகமாக வர்த்தகம் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இக்கண்காட்சியில், தமிழகம், தெலுங்கானா, ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்கம், ம.பி., புதுடில்லி, மஹாராஷ்டிரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட, 11 மாநிலங்களைச் சேர்ந்த, 294 ஆயத்த ஆடை நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|