பதிவு செய்த நாள்
19 ஜன2018
05:40
புதுடில்லி : வணிக நிறுவனங்கள், 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் மற்றும் ஆடம்பர பொருட்களின் விற்பனை விபரங்களை, நிதி புலனாய்வு பிரிவிற்கு தெரிவிக்கும் திட்டம் அறிமுகமாக உள்ளது.இது குறித்து, அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது.இதன்படி, 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு, ‘பான்’ கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை விபரங்களை, பராமரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.எனினும், வங்கிக் கணக்குகளில், கறுப்பு பணப் பரிமாற்றம் நடைபெறுவது, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து, 6 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, நகை மற்றும் ஆடம்பர பொருட்கள் விற்பனை விபரங்களை, கடைக்காரர்கள், நிதி புலனாய்வு பிரிவிடம் தெரிவிக்கும் திட்டம்அறிமுகமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|