ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை? அரசுக்கு தெரிவிக்க வேண்டும்ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை? அரசுக்கு தெரிவிக்க வேண்டும் ... தொடர்ந்து உயரும் ரூபாய் மதிப்பு : 63.70 தொடர்ந்து உயரும் ரூபாய் மதிப்பு : 63.70 ...
நிதியுதவி பெறவும்; முதலீடுகளை ஈர்க்கவும்... சில்லரை விற்பனைக்கு தொழில் துறை அந்தஸ்து மத்திய அரசுக்கு வியாபாரிகள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
05:42

புதுடில்லி, ஜன. 19–‘வங்­கி­களில் சுல­ப­மாக நிதி­யு­தவி பெற­வும், முத­லீ­டு­களை ஈர்க்­க­வும், சில்­லரை விற்­ப­னைக்கு, தொழில் துறை அந்­தஸ்து வழங்க வேண்­டும்’ என, இந்­திய சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­கள் கூட்­ட­மைப்பு, மத்­திய அர­சி­டம் வலியு­றுத்தி உள்­ளது.இந்த அமைப்­பின் தலைமை செயல் அதி­காரி, குமார் ராஜ­கோ­பா­லன் கூறியதா­வது:சில்­லரை விற்­ப­னைக்கு, தொழில் துறை அந்­தஸ்து வழங்க வேண்­டும்; ஜி.எஸ்.டி., கணக்கு தாக்­க­ லில் உள்ள சிர­மங்­களை குறைக்க வேண்­டும் என்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­களை, மத்­திய அர­சி­டம் தெரி­வித்து உள்­ளோம்.தொழில் துறை அந்தஸ்து மூலம், வங்கி, நிதி நிறு­வ­னங்­களில், சுல­ப­மாக நிதி­யு­தவி பெற­லாம்; அதிக முத­லீ­டு­க­ளை­யும் ஈர்க்­க­லாம். இதன் மூலம், தொழில் துறை பெறும் ஊக்­கத்­தொகை உள்ளிட்ட உத­வி­கள், சில்லரை விற்பனை துறைக்­கும் கிடைக்­கும்.‘மல்டி பிராண்டு’ எனப்­படும், பன்­முக சில்­லரை விற்­ப­னை­யில், அன்­னிய நேரடி முத­லீட்டு விதி­மு­றை­களை மேலும் தளர்த்த வேண்­டும்.வேளாண் பொருட்­கள் கொள்­மு­த­லில், இடைத்­தரகர்­களை நீக்க வேண்டும். இத­னால் கிடைக்­கும் பணப் பயன், நுகர்­வோரை சேரும்.இத்­திட்­டத்தை செயல்­படுத்த, வேளாண் பொருட்­கள் உற்­பத்தி சந்தை குழு­வின் சட்ட விதி­முறை­களை, மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என, வலி­யு­றுத்தி உள்­ளோம்.ஜி.எஸ்.டி.,யில், குறிப்­பாக, வரி, ‘ரீபண்டு’ பெறும் நடை­மு­றையை சுல­ப­மாக்க வேண்­டும். வங்கி பரி­வர்த்­தனை சார்ந்த நுகர்­வோ­ருக்கு வழங்­கும் விலைப் பட்டியலில், எச்.எஸ்.என்., குறியீடு; கையொப்­ப­மி­டு­வது மற்­றும் பல பிர­தி­களை அளிக்­கும் நடை­மு­றையை நீக்கி, எளிமைப்­ப­டுத்த வேண்டும். இது போன்ற நட­வ­டிக்­கை­கள், சில்லரை விற்­பனை துறை வளர்ச்சிக்கு உத­வும்.சில்­லரை விற்­ப­னை­யில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்து வரு­கின்றன.இதை ஊக்­கு­விக்க, ஊக்­கச்­ச­லு­கை­கள் வழங்­க­லாம். ‘கிரெ­டிட், டெபிட்’ கார்­டு­களின் பரி­வர்த்­த­னையை விட, மின்­னணு பணப் பரி­வர்த்­தனை செலவு குறை­வாக இருக்­கும் வகை­யில், ஊக்­கச்­ச­லு­கை­கள் வழங்க வலி­யு­றுத்தி உள்­ளோம்.சிறப்­பாக செயல்­படும் சில்­லரை விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு, உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­களில், புதிய சந்­தை­களை அணு­கு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.இது, இந்­தி­யா­வில் இருந்து, சர்­வ­தேச தரத்­தி­லான சில்­லரை விற்­பனை நிறு­வ­னங்­கள் பெருக துணை புரி­யும். எங்­கள் கோரிக்­கை­கள், மத்­திய பட்­ஜெட்­டில் பிர­தி­ப­லிக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம்.இவ்­வாறு அவர் கூறினார்.
குளிர்பதன கிடங்குகள்இந்­தி­யா­வில், பன்­முக சில்­லரை விற்­ப­னை­யில், 51 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது. இந்த விதி­மு­றையை மேலும் தளர்த்த வேண்­டும். இத­னால், அன்­னிய முத­லீடு அதி­க­ரிக்­கும். மேலும், கிடங்­கு­கள், குளிர்­சா­தன கிட்­டங்­கி­கள் அமைப்­ப­தற்கு, ஊக்­கச்­சலுகை­கள் வழங்க வேண்­டும்.ஆசிஷ் கசாத்நுகர்பொருட்கள் – சில்லரை விற்பனை பிரிவு‘எர்னஸ்ட் யங் இந்தியா’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)