பதிவு செய்த நாள்
19 ஜன2018
05:42
புதுடில்லி, ஜன. 19–‘வங்கிகளில் சுலபமாக நிதியுதவி பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும், சில்லரை விற்பனைக்கு, தொழில் துறை அந்தஸ்து வழங்க வேண்டும்’ என, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, குமார் ராஜகோபாலன் கூறியதாவது:சில்லரை விற்பனைக்கு, தொழில் துறை அந்தஸ்து வழங்க வேண்டும்; ஜி.எஸ்.டி., கணக்கு தாக்க லில் உள்ள சிரமங்களை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளோம்.தொழில் துறை அந்தஸ்து மூலம், வங்கி, நிதி நிறுவனங்களில், சுலபமாக நிதியுதவி பெறலாம்; அதிக முதலீடுகளையும் ஈர்க்கலாம். இதன் மூலம், தொழில் துறை பெறும் ஊக்கத்தொகை உள்ளிட்ட உதவிகள், சில்லரை விற்பனை துறைக்கும் கிடைக்கும்.‘மல்டி பிராண்டு’ எனப்படும், பன்முக சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மேலும் தளர்த்த வேண்டும்.வேளாண் பொருட்கள் கொள்முதலில், இடைத்தரகர்களை நீக்க வேண்டும். இதனால் கிடைக்கும் பணப் பயன், நுகர்வோரை சேரும்.இத்திட்டத்தை செயல்படுத்த, வேளாண் பொருட்கள் உற்பத்தி சந்தை குழுவின் சட்ட விதிமுறைகளை, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்.ஜி.எஸ்.டி.,யில், குறிப்பாக, வரி, ‘ரீபண்டு’ பெறும் நடைமுறையை சுலபமாக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை சார்ந்த நுகர்வோருக்கு வழங்கும் விலைப் பட்டியலில், எச்.எஸ்.என்., குறியீடு; கையொப்பமிடுவது மற்றும் பல பிரதிகளை அளிக்கும் நடைமுறையை நீக்கி, எளிமைப்படுத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள், சில்லரை விற்பனை துறை வளர்ச்சிக்கு உதவும்.சில்லரை விற்பனையில், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.இதை ஊக்குவிக்க, ஊக்கச்சலுகைகள் வழங்கலாம். ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகளின் பரிவர்த்தனையை விட, மின்னணு பணப் பரிவர்த்தனை செலவு குறைவாக இருக்கும் வகையில், ஊக்கச்சலுகைகள் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.சிறப்பாக செயல்படும் சில்லரை விற்பனையாளர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், புதிய சந்தைகளை அணுகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இது, இந்தியாவில் இருந்து, சர்வதேச தரத்திலான சில்லரை விற்பனை நிறுவனங்கள் பெருக துணை புரியும். எங்கள் கோரிக்கைகள், மத்திய பட்ஜெட்டில் பிரதிபலிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
குளிர்பதன கிடங்குகள்இந்தியாவில், பன்முக சில்லரை விற்பனையில், 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறையை மேலும் தளர்த்த வேண்டும். இதனால், அன்னிய முதலீடு அதிகரிக்கும். மேலும், கிடங்குகள், குளிர்சாதன கிட்டங்கிகள் அமைப்பதற்கு, ஊக்கச்சலுகைகள் வழங்க வேண்டும்.ஆசிஷ் கசாத்நுகர்பொருட்கள் – சில்லரை விற்பனை பிரிவு‘எர்னஸ்ட் யங் இந்தியா’
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|