பதிவு செய்த நாள்
21 ஜன2018
04:35
புதுடில்லி, : வரும், 2018 -– 19ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட், பிப்., 1ல், பார்லி.,யில் தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி, பட்ஜெட் ஆவணங்களை அச்சடிக்கும் பணி, நேற்று துவங்கியது.டில்லியில், ‘நார்த் பிளாக்’கில் உள்ள, நிதியமைச்சக வளாகத்தில், நீண்ட கால வழக்கப்படி, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, அல்வா கிளறி, பட்ஜெட் ஆவண அச்சடிப்பை துவக்கி வைத்தார். இதையடுத்து, அனைவருக்கும் சுவையான அல்வா வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், சுபாஷ் சந்திர கர்க், நிதித் துறை இணை அமைச்சர், சிவ் பிரதாப் சுக்லா, நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பார்லி.,யில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் வரை, நிதியமைச்சகத்தின் ஒருசில மூத்த அதிகாரிகள் தவிர்த்து, இதர அதிகாரிகள், அச்சகத்திலேயே தங்கியிருக்க வேண்டும். பட்ஜெட் தகவல்கள் கசிவதை தடுக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|