வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கிவட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு ...
குறைந்த விலைக்கு வீடு வாங்குவோரிடம் ஜிஎஸ்டி வசூலிக்கக் கூடாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
10:23

புதுடில்லி : சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ.500 வரையிலான நுழைவு கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு வாங்குவோரிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. வரி விகிதங்களை மாற்றி அமைப்பது பற்றி விவாதிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில அரசு பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அவ்வப்போது கூடி, மத்திய அரசுக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த மாதம் 18-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. சர்க்கஸ், நடனம் மற்றும் அரங்கத்தில் நடைபெறும் நாடகம், விருது நிகழ்ச்சிகள், அழகு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் மற்றும் கோளரங்கம் போன்றவற்றில் நபருக்கு ரூ.250 வரையிலான நுழைவுக்கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விலக்கு உச்சவரம்பை, ரூ.500 ஆக உயர்த்த ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்தது.

அதை ஏற்றுக்கொண்டு, கடந்த மாதம் 25-ந் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. எனவே, கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து, மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ.500 வரையிலான நுழைவுக்கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படுகிறது. கலாசார, விளையாட்டு நிகழ்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இச்சலுகை வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கேளிக்கை பூங்கா, தீம் பார்க், வாட்டர் பார்க், உல்லாச சவாரி, குடை ராட்டினம், கூட்டு நடனம் போன்றவற்றுக்கான நுழைவுக்கட்டணத்துக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதை 18 சதவீதமாக குறைப்பதற்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக்கொண்டு, கடந்த 25-ந் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் சுமை குறைவதற்காக இச்சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதே சமயத்தில், கேளிக்கை பூங்காக்கள் மீது உள்ளாட்சிகள் விதிக்கும் வரியை மாநில அரசுகள் உயர்த்தக்கூடாது என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், குறைந்த விலை வீடுகளை வாங்குவோரிடம் கட்டுமான நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இத்தகைய வீடுகளின் கட்டுமான பணிகளுக்கு 8 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரியும், உள்ளட்டு வரி ஆதாயம் மூலம் ஈடுகட்டப்படும் என்பதால், வீடு வாங்குவோரிடம் 8 சதவீத ஜி.எஸ்.டி. வரியை கட்டுமான நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒருவேளை, உள்ளட்டு வரி ஆதாய பயனை கருத்தில் கொண்டு, ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பிருந்த விலையை விட வீடுகளின் விலையை குறைத்தால் மட்டுமே ஜி.எஸ்.டி. வசூலிக்கலாம் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)