பதிவு செய்த நாள்
13 பிப்2018
02:29
சிங்கப்பூர்:இந்தியா – சிங்கப்பூர்பங்குச் சந்தைகள் இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது.பிப்., 9ல், மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, மெட்ரோபாலிட்டன் பங்குச் சந்தை ஆகியவை இணைந்து,
ஓர் அறிக்கை வெளியிட்டன.அதில், ‘சிங்கப்பூர் உட்பட, 11 சர்வதேச பங்குச் சந்தைகளில், ‘நிப்டி’ மற்றும் இதர குறியீடுகள் மீதான, முன்பேர வர்த்தகத்திற்கு வழங்கப்பட்ட உரிமம், ரத்து செய்யப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.வெளிநாட்டு பங்குச் சந்தைகளில், இத்தகைய குறியீடுகள் மீதான வர்த்தக அளவு, வரம்பு மீறி உயர்ந்து வருவதால், உள்நாட்டு பங்குச் சந்தைகளின் நலனை கருதி, இந்த முடிவு எடுக்கப்படுவதாக, அதில் கூறப்பட்டிருந்தது.இதனால், சிங்கப்பூர் பங்குச் சந்தையில், நேற்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில், எஸ்.ஜி.எக்ஸ்., நிப்டி குறியீடு, 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது.இதற்கிடையே, பங்குச் சந்தைகளிடையே எழுந்துள்ள இந்த மோதல் குறித்து, இரு தரப்பிலும் பேச்சு நடத்த உள்ளதாக, அமெரிக்காவின், எப்.ஐ.ஏ, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|