பதிவு செய்த நாள்
14 பிப்2018
00:34
ஜாம்ஷெட்பூர்:அமெரிக்காவைச் சேர்ந்த, எதிஸ்பியர் இன்ஸ்டிடியூட், இந்தாண்டின், உலகின் மிகச் சிறந்த நன்னெறி நிறுவன விருதுக்கு, டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேர்வு செய்து உள்ளது.
உலோகம், தாது பொருட்கள் மற்றும் சுரங்கப் பிரிவில், 6வது முறையாக, டாடா ஸ்டீல் நிறுவனம், இந்த விருதை பெறுகிறது.‘‘நிறுவனத்தின் சிறப்பான வர்த்தக கொள்கை, நம்பிக்கையுடன் கூடிய பாரம்பரியமான தலைமைக்கு தொடர்ந்து அங்கீகாரம் அளிக்கும் வகையில், 6வது முறையாக விருது கிடைத்துள்ளது,’’ என, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, டி.வி.நரேந்திரன் தெரிவித்து உள்ளார்.
வர்த்தகத்தில் ஒழுக்கம், சமூக பொறுப்புணர்வு, நன்னெறி கலாசாரம், நிர்வாகம், தலைமை பண்பு ஆகிய, ஐந்து அம்சங்களின்படி, இந்த விருதுக்கு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.உலகளவில், 57 தொழில் பிரிவுகளில், சிறந்த நன்னெறி கொள்கைகளுடன் செயல்படும், 23 நாடுகளைச் சேர்ந்த, 135 நிறுவனங்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளன.விருது வழங்கும் விழா, மார்ச், 13ல் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|