பதிவு செய்த நாள்
15 பிப்2018
00:30
புதுடில்லி:பிஸ்கட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி தயாரிப்பில், முன்னணியில் உள்ள, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் வணிகத்தை வலுப்படுத்த, 50 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, வருண் பெர்ரி கூறியதாவது:நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்க, அடுத்த நிதியாண்டு இறுதிக்குள், 50 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதில், ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில், சில கூடுதல் அம்சங்கள்சேர்த்து அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், கிரீக் கேக்ஸ், சீப்பிட்டா ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து, அக்., – நவ., மாதங்களுக்குள், பால் பொருட்கள் மற்றும் ரொட்டி வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்து உள்ளோம். மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன், ஆப்ரிக்காவிலும் விற்பனையை விரிவுபடுத்த உள்ளோம்.
மஹாராஷ்டிர மாநிலம்,புனேவில் உள்ள, ரஞ்சன்கனான் எனும் இடத்தில், 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இது, ஒருங்கிணைந்த உணவு பூங்காவாக திகழும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|