பதிவு செய்த நாள்
21 பிப்2018
00:26
புதுடில்லி : ‘‘சீனாவை விட, இந்தியாவில் வர்த்தகச் சூழல் சிறப்பாக உள்ளது,’’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் மூத்த மகன், டொனால்டு ஜான் டிரம்ப் ஜூனியர் தெரிவித்து உள்ளார்.
இவரின், டிரம்ப் ஆர்கானிசேஷன் நிறுவனம், புனே, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட நான்கு முக்கிய நகரங்களில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது. இத்திட்டங்களுக்கு, உள்நாட்டு நிறுவனங்கள், ‘பிராண்டு’ உரிமம் பெற்றுள்ளன. இந்த வகையில், நான்காவது மிகப்பெரிய குடியிருப்பு திட்டம், ஹரியானா மாநிலம், குருகிராமில் அமைய உள்ளது.
இதற்காக, இந்தியா வந்த, ஜான் டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசியதாவது: அமெரிக்காவிற்கு வெளியே, சிறந்த வர்த்தகச் சூழல் உள்ள நாடுகளில், சீனாவை விட, இந்தியா சிறந்து விளங்குகிறது. இரு ஆண்டுகளாக, மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள், அமெரிக்கா போன்ற பல நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க துணை புரியும்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், பினாமி சட்டம் போன்றவற்றால், எங்களை போன்றவர்கள் தொழில் துவங்குவது சுலபமாகி உள்ளது. இந்திய மக்களிடம், சற்று அதிக நேர்மையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|