பதிவு செய்த நாள்
21 பிப்2018
00:29
ஐதராபாத் : ‘‘ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய் வளர்ச்சியில், அடுத்த நிதியாண்டிலும் மாற்றமிருக்காது,’’ என, ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவர், சந்திரசேகர் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், ஐ.டி., துறை வருவாய் வளர்ச்சி, நிர்ண யித்த, 7.8 சதவீதத்தை விட குறைவாக இருக்கும். ஏற்றுமதி வருவாய், 16,700 கோடி டாலர்; உள்நாட்டு வருவாய், 10 சதவீதமாக இருக்கும். வரும், 2018 – 19ம் நிதியாண்டில், ஐ.டி., துறை, 1 லட்சம் புதியவர்களை பணிக்கு அமர்த்தும். இது, மதிப்பீட்டை விட, 50 சதவீதம் குறைவாகும்.
ஐ.டி., மற்றும் அது சார்ந்த சேவைகள் துறை வளர்ச்சி, 7 – 9 சதவீதமாக இருக்கும். உள்நாட்டு வருவாய் வளர்ச்சி, 10 – 12 சதவீதமாக இருக்கும். ஏற்றுமதி வருவாயில், ஐ.டி., துறையில் வளர்ச்சி குறைவாக இருக்கும் என, தெரிகிறது. எனினும், சாதகமான சூழல் காரணமாக, வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவின், ‘விசா’ கட்டுப்பாடு உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகளால், ஐ.டி., துறை வருவாய் வளர்ச்சியில் மாற்றமிருக்காது என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|