பதிவு செய்த நாள்
22 பிப்2018
02:49
புதுடில்லி : சரக்கு போக்குவரத்துக்கான, ‘இ – வே’ ரசீது எனப்படும், மின் வழிச் சீட்டு நடைமுறை, மார்ச், 7ல், மீண்டும் அறிமுகமாகும் என, தெரிகிறது.கடந்த, 1ம் தேதி அறிமுகமான இத்திட்டம், துவக்க நாளிலேயே, வலைதளத்தில், லட்சக்கணக்கானோரின் பதிவை ஏற்கும் திறனின்றி முடங்கியது. இதையடுத்து, இத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக, மத்திய அரசு அறிவித்தது.இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், மின் வழிச் சீட்டுகளின் பதிவேற்றத்தை கையாளும் திறனை, தேசிய தகவல் மையம் உயர்த்தி உள்ளது. எனினும் தற்போது, ஒரு நிமிடத்தில், 500 ரசீதுகளை மட்டுமே பதிவேற்றும் அளவிற்குத் தான் திறன் மேம்பட்டு உள்ளது. இது, மிகக் குறைவானது. அதனால், மேலும் திறனை உயர்த்தி, மின் வழிச் சீட்டு நடைமுறையை, ஏப்., 1ல், மீண்டும் அமல்படுத்தலாம் என, தேசிய தகவல் மையம் தெரிவித்தது.ஆனால், வரி இழப்பை தடுக்கும் நோக்கில், மார்ச், 7ல், திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என, நிதியமைச்சகம் உறுதியாக தெரிவித்துள்ளது. அதன்படி செயல்பட்டால், மார்ச், 7ல், மீண்டும் இத்திட்டம் அறிமுகமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|