தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
ஊழல் நாடுகள் : 81வது இடத்தில் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 பிப்
2018
15:39

புதுடில்லி : உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் உள்ளது. 2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை 'டிரான்பாரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டுள்ளது.
மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது. 2017 ம் ஆண்டில் 180 ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடம் வகிக்கிறது.
இது குறித்து டிரான்பாரன்சி இன்டர்நேஷனல் கூறுகையில், ஆசிய பசிபிக் நாடுகளில் பத்திரிக்கைகள், சமூக அமைப்புக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள் அல்லது பாதுகாப்புத்துறையை சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களால் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் கூட ஊழல் அதிகம் பரவ காரணமாக அமைகிறது. பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவு போன்ற நாடுகள் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் ஊழல் அதிகமும், பத்திரிக்கை சுதந்திரம் குறைவாகவும் உள்ளது. இந்த நாடுகளில் தான் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகமாக உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான கட்டுரைகளை வெளியிட்ட 15 க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து , டென்மார்க் நாடுகள் முதலிடத்தில் உள்ளன. சிரியா, தெற்கு சூடான், சோமாலியா போன்ற நாடுகள் ஊழல்  அதிகம் நிறைந்த நாடுகளாக உள்ளன. இந்த பட்டியலில் சீனா 77 வது இடத்திலும், பிரேசில் 96 வது இடத்திலும், ரஷ்யா 135 வது இடத்திலும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)