செம்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறதுசெம்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ... பருத்தி விலை சரிவால் ஜவுளி துறைக்கு லாபம் பருத்தி விலை சரிவால் ஜவுளி துறைக்கு லாபம் ...
ஆயுள் காப்பீட்டு துறையில் மோசடி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2018
00:42

மும்பை : ஆயுள் காப்­பீட்டு துறை, வேக­மாக வளர்ச்சி அடைந்து வரு­வ­தற்கு ஏற்ப, அத்­து­றை­யில், காப்­பீடு கோரிக்கை சார்ந்த நிதி மோச­டி­களும் பெருகி வரு­வது, ஆய்­வொன்­றில் தெரிய வந்­துள்­ளது.

‘எர்­னஸ்ட் யங்’ நிறு­வ­னத்­தின் மோசடி புல­னாய்வு மற்­றும் தக­ராறு சேவை­கள் பிரிவு, பொது மற்­றும் தனி­யார் ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றும், 100க்கும் மேற்­பட்­டோ­ரி­டம் ஆய்வு நடத்தி, வெளி­யிட்­டுள்ள அறிக்கை:

ஆயுள் காப்­பீட்டு துறை­யில், மூன்­றாம் நபர் இழப்­பீடு சார்ந்த பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்து உள்ளன. இத்­து­றை­யில், ‘டேட்டா’ எனப்­படும், தர­வு­கள் பாது­காப்­பும் கவ­லைக்­கு­ரி­ய­தாக உள்­ளது. இழப்­பீடு கோரும் நடை­மு­றை­க­ளி­லும், ஏகப்­பட்ட ஓட்­டை­கள் உள்ளன. இது போன்ற கார­ணங்­க­ளால், ஆயுள் காப்­பீட்டு துறை­யில், நிதி சார்ந்த மோச­டி­கள் அதி­க­ரித்­துள்ளன. இரு ஆண்­டு­களில், இத்­த­கைய மோச­டி­கள், 30 சத­வீ­தம் வரை உயர்ந்து உள்­ள­தாக, 56 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர்.

ஆய்­வில், மூன்றில் இரு­வர், தங்­கள் நிறு­வ­னம், ஊழலை வெளிப்­ப­டுத்­து­வோர் தொடர்­பான செயல் திட்­டங்­களை, முழு­மை­யாக மேற்­கொள்­ளா­மல் உள்­ள­தாக குற்­றஞ்­சாட்டி உள்­ள­னர். மூன்­றாம் நபர் இழப்­பீடு தொடர்­பான நடை­மு­றை­களை மேம்­ப­டுத்தி, தடுப்பு அரண்­களை சரி­வர ஏற்­ப­டுத்­தா­மல் உள்­ள­தாக கூறி­யுள்­ள­னர்.

இந்­தி­யா­வில், மிக அதி­க­மாக உள்ள இளம் தலை­மு­றை­யி­ன­ரும், அவர்­க­ளி­டம் புழங்­கும் அதிக செல­வ­ழிப்பு வரு­வா­யும், ஆயுள் காப்­பீட்டு துறை­யின் வளர்ச்­சிக்கு உத­வு­கிறது. இத்­த­கைய சூழ­லில், நிதி மோச­டி­களை தடுக்க, ஆயுள் காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், நவீன தொழில்­நுட்­பங்­களில் அதிக முத­லீடு செய்ய வேண்­டும். தர­வு­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தி, நிர்­வாக நடை­மு­றை­களை கடு­மை­யாக்­கி­னால், நிதி மோச­டி­களின் இடர்ப்­பாட்டை குறைக்­க­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)