பதிவு செய்த நாள்
24 பிப்2018
00:42
மும்பை : பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவை காரணமாக, ஜவுளித் துறையின் லாபம், 2018 – 19ம் நிதியாண்டில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இது குறித்து, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அமல் போன்றவற்றால், ஜவுளித் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு, செப்., – மார்ச் வரையிலான இரண்டாவது அரையாண்டில் மறையும். நடப்பு நிதியாண்டின் இறுதி மாதங்களில், பூச்சி தாக்குதல் காரணமாக, பருத்தி விலை அதிகரித்தது.
இருந்த போதிலும், எதிர்பார்த்ததை விட, பருத்தி சாகுபடி பரப்பு, 19 சதவீதம்; உற்பத்தி, 11 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், வரும் நிதியாண்டில், பருத்தி விலை கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஜவுளி நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவை குறையும். இத்துடன், ஜவுளிக்கான தேவையும் அதிகரிக்கும் என்பதால், இத்துறை சார்ந்த நிறுவனங்களின் லாப வரம்பு உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|