இழப்பை தவிர்க்க என்ன வழி?இழப்பை தவிர்க்க என்ன வழி? ... பாலி­சியை  புதுப்­பிக்கும் வழி பாலி­சியை புதுப்­பிக்கும் வழி ...
வங்கிகள் தனியார்மயம் சரியான தீர்வா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2018
04:44

நிரவ் மோடி, ‘ரோட்­டோ­மேக்’ பேனா என்று தொடர்ச்­சி­யாக, ஒவ்­வொரு பெரிய நிறு­வ­ன­மும் பொதுத் துறை வங்­கி­களை பல ஆயி­ரம் கோடி ரூபாய் மோசடி செய்து வரும் வேளை­யில், வங்­கி­க­ளைத் தனி­யார்­ம­யப்­ப­டுத்­தி­விட்­டால் என்ன என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இது சரியா? சாத்­தி­யமா? பொது­மக்­க­ளுக்­குப் பயன் தருமா?பிர­த­ம­ரின் பொரு­ளா­தார ஆலோ­ச­கர், அர­விந்த் சுப்­பி­ர­ம­ணி­யம் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­துள்­ளார். இதை, ‘பிக்கி’ போன்ற தொழில் துறை அமைப்­பு­கள் வர­வேற்­கின்­றன. அதி கோத்­ரெஜ் சாதக பாத­கங்­களை எடுத்­துச் சொல்லி, வங்­கி­க­ளைத் தனி­யார்­ம­யப்­ப­டுத்­து­வதே சரி என்­கி­றார். வங்­கித் துறை ஊழி­யர் சம்­மே­ள­னம் மட்­டும் வேறு குர­லில் பேசு­கிறது.சில யதார்த்தங்கள்முத­லில் சில நிஜங்­க­ளைப் புரிந்­து­கொள்­வோம். மறைந்த முன்னாள் பிரதமர் இந்­திரா, வங்­கி­களை தேசி­ய­ம­ய­மாக்­கிய காலம் துவங்கி, சமூக ரீதி­யான முத­லீ­டு­க­ளுக்கு வங்­கி­கள் பயன்­பட்டு வந்­துள்­ளன.சின்­னச் சின்ன நக­ரங்­கள், கிரா­மங்­கள் உட்­பட விரி­வான கட்­ட­மைப்பை வங்­கி­கள் கொண்­டி­ருந்­தன. அங்­குள்ள ஏழை, எளி­ய­வர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்ற வங்­கி­கள் பயன்­பட்­டன.சமீப ஆண்­டு­களில் கூட, ‘பிர­த­மர் ஜன்தன் யோஜனா’ திட்­டத்தை அறி­வித்து, பல கோடி ஜீரோ பேலன்ஸ் அக்­க­வுன்ட்­டு­க­ளைத் துவங்­கி­யது, சமூக பாது­காப்பை ஏழை, எளி­ய­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு தான்.வேறு விதத்­தில் சொல்­ல­வேண்­டு­மென்­றால், அர­சாங்­கத்­தின் கனிவு முக­மாக, ஆத­ரவு கர­மாக, தோள் கொடுக்­கும் தோழ­னாக, வங்­கி­கள் செயல்­பட்­டன. இன்­றைக்கு, இதை சோஷ­லிச பொரு­ளா­தார அணு­கு­மு­றை­யின் சாபக்­கே­டா­கப் பார்க்­கத் துவங்­கி­விட்­டோம்.ஒவ்­வொரு நிறு­வ­ன­மும் தன்­ன­ள­வில் லாபம் ஈட்ட வேண்­டும். குறைந்­த­பட்­சம் கையைக் கடிக்­கக் கூடாது. அதைச் செய்­யத் தவ­றும் நிறு­வ­னங்­கள், மக்­க­ளின் வரிப்­ப­ணத்­தைக் கொள்­ளை­ய­டிக்­கின்­றன என்ற சிந்­தனை ஏற்­பட்­டு உள்­ளது.பொதுத் துறை வங்­கி­கள் இன்­னும் ஒரு படி மேலே போய்­விட்­டன. அங்கே மோச­டி­கள் அரங்­கே­று­கின்­றன; அதைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.ஒவ்­வொரு முறை­யும் அர­சாங்­கம் தலை­யிட்டு, வங்­கி­க­ளைக் காப்­பாற்ற வேண்­டிய அவல நிலை. இந்­தச் சூழ்­நி­லை­யில், மக்­கள் நல­னை­யும் மன­தில் வைத்­துக்­கொண்டு என்ன செய்­ய­லாம் என்று ஆலோ­சனை செய்­யப்­ப­டு­கிறது.வங்­கி­க­ளைத் தனி­யார்­ம­யப்­ப­டுத்­து­வது உட­னடி யோசனை. இதி­லும் சாதக பாத­கங்­கள் உண்டு. அதைத் தனியே பேசு­வோம். வேறு சில யோச­னை­களை முத­லில் பார்த்து விடு­வோம்.இரண்டு யோசனைகள்பொதுத் துறை வங்­கி­க­ளோடு அர­சாங்­கத்­துக்கு உள்ள நேரடி தொடர்பை விலக்க வேண்­டும். அனைத்து பொதுத் துறை வங்­கி­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து நிர்­வ­கிக்­கும் ஒரு தனி அமைப்பை உரு­வாக்கி, அதன் கையில் வங்­கி­க­ளைக் கொடுத்­து­விட வேண்­டும். இதை, தேர்­தல் ஆணை­யம் போன்ற ஒரு சுயேச்­சை­யான அமைப்­பாக மாற்றி, சுதந்­தி­ர­மாக இயங்க அனு­ம­திக்க வேண்­டும்.இதன் மூலம், இரண்டு விஷ­யங்­கள் நடை­பெ­றும். அர­சாங்­கத்­தின் கனிவு முக­மாக, இனி­யும் பொதுத் துறை வங்­கி­கள் செயல்­பட வேண்­டி­ய­தில்லை.அத­னால், அர­சி­யல்­வா­தி­களோ, இன்ன பிறரோ எந்த அழுத்­தத்­தை­யும் வங்­கி­கள் மீது செலுத்த முடி­யாது. இரண்டு, ஒவ்­வொரு வங்­கிக் கிளை­யும் எது இந்த நாட்­டின் வளர்ச்­சிக்கு உகந்­ததோ, அதை மட்­டுமே செய்­யத் துணி­யும்; பொறுப்பு மேம்­படும். எல்­லாம் மேலே இருப்­ப­வன் பார்த்­துக் கொள்­வான் என்று கைக­ழு­வும் உத்தி செல்­லு­ப­டி­யா­காது.இப்­ப­டிச் செய்­யும்­போது, இத்­தனை கிளை­கள் வேண்­டுமா, இத்­தனை ஏ.டி.எம்.,கள் வேண்­டுமா, எங்­கே­யெல்­லாம் பணி­களை ஒருங்­கி­ணைக்க முடி­யும்? என்ற சிந்­தனை மேலோங்­கும். விளைவு, படிப்­ப­டி­யாக வங்­கி­களே ஒருங்­கி­ணைக்­கப்­பட முடி­யும். அடுத்த ஐந்­தாண்­டு­க­ளின் முடி­வில், நான்கு பொதுத் துறை வங்­கி­களே நிலைத்து நிற்­கும். அவற்­றால் திறம்­பட வேலை செய்­ய­வும் முடி­யும்.இன்­னொரு யோசனை, பொதுத் துறை வங்­கி­களை, வெறும் டெபா­சிட் பெறும் வங்­கி­க­ளாக மட்­டும் வைத்­துக் கொள்­வது. சரி­யா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், அவை எந்­தக் கட­னை­யும் கொடுக்­கக் கூடாது. வீட்­டுக் கடனோ, வணி­கக் கடனோ, பெரு­நி­று­வ­னக் கடனோ, அவை அனைத்­தை­யும் தனி­யார் வங்­கி­களே வழங்­கட்­டும்.பொதுத் துறை வங்­கி­கள் பெறும் சேமிப்­பு­களை, ரிசர்வ் வங்­கி­யி­டம் கொடுத்­து­விட்டு, அவற்­றின் மூல­மாக, தனி­யார் வங்­கி­க­ளுக்கு கடன் வழங்­கப்­ப­ட­லாம். அவை தகுதி பார்த்து, தரம் பார்த்து, தேவை பார்த்து, கடன்­களை வழங்­கட்­டும்; மீண்­டும் வசூல் செய்­யட்­டும். கடன் தொல்­லை­யி­லி­ருந்து பொதுத் துறை வங்­கி­களை மீட்­க­லாம்.இதில், தனி­யார் வங்­கி­கள் கடன்­க­ளைக் கொடுப்­ப­தி­லும், வசூல் செய்­வ­தி­லும் சிறப்­பா­கச் செயல்­படும் என்ற நப்­பாசை ஒன்று ஒளிந்­தி­ருக்­கிறது. தனியார்மயம்அதி கோத்­ரெஜ் சொல்­வது போன்று, ‘தனி­யார் வங்­கி­களில் மோச­டி­களே இல்லை அல்­லது குறைவு’ என்­பது உண்­மை­யாக இருந்­தால், மேலே சொன்ன யோசனை பய­ன­ளிக்­கும்.அடுத்து, நேர­டி­யாக வங்­கி­க­ளைத் தனி­யார்­ம­ய­மாக்­கு­வது என்ற யோச­னைக்கு வரு­வோம். பல வெளி­நாட்டு வங்­கி­கள் இங்கே கிளை திறக்க காத்­தி­ருக்­கின்­றன. அவை லாபம் ஈட்­டும் துறை­களில் மட்­டுமே தம் கவ­னத்­தைச் செலுத்­தும். ஏழை, எளி­ய­வர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றாது என்ற விமர்­ச­னம் தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­ப­டு­கிறது. எந்த வங்­கி­யும் அப்­படி கண்ணை மூடிக்­கொண்டு இருந்­து­விட முடி­யாது. தேவை எங்­கெல்­லாம் இருக்­கி­றதோ, அவை­யெல்­லாம் வங்­கி­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கும் வாய்ப்பு. அத­னால், தனி­யார் வங்­கி­கள் இன்­னும் திறம்­பட இந்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும்.அப்­ப­டி­யென்­றால், அர­சாங்­கத்­தின் கனிவு முகம் எங்கே போகும்? எப்­படி அது தன் திட்­டங்­களை, மானி­யங்­களை ஏழை, எளி­ய­வர்­க­ளுக்­குக் கொண்டு சேர்க்­கும்?மாற்று வழிஇருக்­கவே இருக்­கிறது இந்­தியா போஸ்ட். வங்­கி­களை விட, இன்­னும் விரி­வான நெட்­வொர்க்­கைக் கொண்­டது அஞ்­சல் துறை. அதில் ஏற்­க­னவே, ‘கோர் பேங்­கிங் சிஸ்­டம்’ நிறு­வப்­பட்­டு­விட்­டது. மக்­க­ளி­டம் சென்று சேரு­வது இன்­னும் சுல­பம்.பொதுத் துறை வங்­கி­கள், அர­சாங்­கத்­தின் கனிவு முகமா, ஏவல் ஆளா அல்­லது சுயேச்­சை­யான பரி­வர்த்­தனை அமைப்பா என்­பதை அர­சாங்­கம் தீர்­மா­னிக்க வேண்­டும்.கனிவு முகம் தான் என்­றால், மோச­டி­கள் தொட­ரவே செய்­யும். மீண்­டும் மீண்­டும் மக்­க­ளின் வரிப்­ப­ணம் வீணா­கவே செய்­யும். இத­னால் கிடைக்­கும் புகழை விட, அவப்­பெ­யரே அதி­கம். அதை, மத்­திய அரசு அனு­ம­திக்­க­லாகாது.
–ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)