பாலி­சியை  புதுப்­பிக்கும் வழிபாலி­சியை புதுப்­பிக்கும் வழி ... பங்கு பரிவர்த்தனை கட்டணம் ரத்து மும்பை பங்கு சந்தை அறிவிப்பு பங்கு பரிவர்த்தனை கட்டணம் ரத்து மும்பை பங்கு சந்தை அறிவிப்பு ...
நிலை­யான வரு­மானம் பெற கைகொ­டுக்கும் முத­லீட்டு உத்­திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2018
04:47

பொது­வாக ஓய்வு காலத்தின் போது நிலை­யான வரு­மானம் தேவை எனும் அடிப்­ப­டையில், பலரும் இத்­த­கைய வரு­மா­னத்தை மனதில் கொண்டு முத­லீடு செய்­வது உண்டு. ஆனால் நிலை­யான வரு­மா­னத்தின் தேவை ஓய்வு காலத்தில் மட்டும் வரு­வ­தல்ல. பணி புரியும் காலத்­தி­லேயே பல­வித கார­ணங்­க­ளுக்­காக முத­லீ­டுகள் மூலம் நிலை­யான வரு­மா­னத்தை எதிர்­பார்க்­கலாம். உதா­ர­ணத்­திற்கு பிள்­ளைகள் கல்வி இலக்கை நிறை­வேற்ற, வீட்­டுக்­கடன் தவ­ணையை அடைக்க, சுற்­றுலா பயணம் மேற்­கொள்ள என, பல­வித நோக்­கங்­க­ளுக்­காக முத­லீடு மூலம் வரு­மா­னத்தை நாடலாம். வட்டி வரு­மானம் அளிக்க கூடிய வங்கி மற்றும் வர்த்­தக வைப்பு நிதிகள், கடன் பத்­தி­ரங்கள், அரசின் வரு­மான திட்­டங்கள், மியூச்­சுவல் பண்ட் நிறு­வ­னங்­களின் கடன்சார் திட்­டங்கள் உள்­ளிட்ட முத­லீட்டு வாய்ப்­புகள் இந்த நோக்­கத்தில் கைகொ­டுக்கும். இவற்றில் பொருத்­த­மான சாத­னங்­களை தேர்வு செய்­வ­தோடு, அவை மூல­மான வரு­மா­னத்தை பெறு­வ­தற்கு ஏற்ற உத்­தியும் வகுத்­தி­ருக்க வேண்டும்.நீண்ட கால முத­லீடுநிலை­யான வரு­மானம் பெற எளிய வழி, அதிக வட்டி அளிக்கும் பத்­தி­ரங்­களில் அதிக ஆண்­டு­களுக்கு முத­லீடு செய்­வ­தாகும். இடையே வட்டி விகிதம் குறைந்­தாலும் பாதிப்பு இருக்­காது. ஆனால் இப்­படி பத்­தி­ரங்­களில் பணத்தை போடு­வ­தற்கு முன் உட­ன­டித் ­தே­வைகள் மற்றும் அவ­சர தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள, போது­மான நிதி இருப்­பதை உறுதி செய்து கொள்­வது நல்­லது. பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்யும் போது, முதிர்வு காலத்­திற்கு முன் அசல் கிடைக்க வாய்ப்­பில்லை. சந்­தையில் விற்கும் நிலை ஏற்­பட்டால், நஷ்­டத்தில் விற்கும் சூழலும் வரலாம். பொது­வாக, வரு­மானம் தேவைப்­படும் காலத்­திற்கு ஏற்ப முத­லீட்டு காலத்தை அமைத்­துக் ­கொள்­ளலாம்.ஒரு சில பத்­தி­ரங்கள் ரேட்டிங் குறை­வாக இருந்­தாலும் அதிக வட்டி அளிக்க வாய்ப்­பி­ருக்­கி­றது. இவற்­றையும் பரி­சீ­லிக்­கலாம்.அதே போல, முத­லீ­டு­களின் முதிர்வு காலத்­தையும் திட்­ட­மி­டலாம். ஒரே நேரத்தில் எல்லா முத­லீ­டு­களும் முதிர்­வ­டை­வது போல் இருப்­பதை விட, படிப்­ப­டி­யாக ஒவ்­வொரு முத­லீடும் ஒவ்­வொரு கட்­ட­மாக முதிர்­வ­டையும் வகையில் முத­லீடு செய்­வது நல்ல பலன் அளிக்கும். வட்டி விகிதம் குறைந்­தாலும் பாதிப்பு குறை­வா­கவே இருக்கும். கடன்சார் முத­லீ­டுகள்சம­பங்­குகள் அளிக்கும் டிவிடெண்ட் மற்றும் வாடகை வரு­மானம் ஆகி­ய­வையும் நிலை­யான வரு­மானம் அளிக்கும். எனவே கடன்சார் முத­லீ­டு­களில் மட்டும் கவனம் செலுத்த வேண்­டி­ய­தில்லை. பங்­குகள் மீதான டிவி­டெண்­டிற்கு உத்­தர­வாதம் இல்லை என்­றாலும் இவை நல்ல வாய்ப்­பாகும். நல்ல வருவாய் அளிக்கும் பங்­கு­க­ளாக தேர்வு செய்து முத­லீடு செய்­யலாம். வாடகை வரு­மானம் தேவை எனில் அதற்­கேற்ப திட்­ட­மிட்டு முத­லீடு செய்ய வேண்டும். வட்டி வரு­மானம் தவிர, முத­லீட்டை விற்­பதன் மூல­மான வரு­மா­னத்­திலும் கவனம் செலுத்­தலாம். அதா­வது முத­லீட்டை பொருத்­த­மான காலத்தில் விற்று வெளி­யே­று­வதன் மூலம் பலன் பெறலாம். இதற்­கான இலக்கை முத­லி­லேயே தீர்­மா­னித்­துக் ­கொள்ள வேண்டும். அந்த காலம் வந்­ததும், கையில் உள்ள பங்கு அல்­லது தங்­கத்தை விற்று லாபம் பார்க்­கலாம். ஆனால் வருவாய் தேவைப்­படும் அள­விற்கு மட்­டுமே விற்க வேண்டும். முத­லீட்டு உத்­திகள் ஒரு­வரின் நிதி சூழல் மற்றும் வய­திற்­கேற்ப மாறு­படும் என்­ப­தையும் மனதில் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)