பதிவு செய்த நாள்
04 மார்2018
00:15
கோல்கட்டா:‘‘தேயிலைக்கான தேவை குறைந்தால், அதை சார்ந்துள்ள சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவர்,’’ என, தேயிலை வாரிய தலைவர், பி.கே.பெஸ்பரூவா தெரிவித்து உள்ளார்.அவர் கூறியதாவது:
நாட்டின் தேயிலை உற்பத்தியில், சிறிய தேயிலை விவசாயிகளின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. 2017ல், தேயிலை உற்பத்தி, 135 கோடி கிலோவாக இருந்தது. இதில், சிறு விவசாயிகளின் பங்கு, 63 கோடி கிலோ என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தேயிலைக்கான தேவை குறைந்திருப்பது, ஒட்டுமொத்த சந்தையை பாதிக்கும். தேயிலைக்கான தேவை அதிகரித்தால் மட்டுமே, இத்துறையில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை முடிவிற்கு வரும்.தேயிலை தொழிற்சாலைகள், சிறிய விவசாயிகளின் தேயிலையை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்கின்றன.
சிறிய விவசாயிகள், உற்பத்தியை அதிகரிக்க, முதிர்ச்சியான தேயிலைகளையும், மொட்டுக்களையும் பறிக்கின்றனர். இதனால், தேயிலையின் தரம் குறைகிறது.இதையொட்டி, தேயிலை வாரியம், தரமான தேயிலை உற்பத்தி குறித்து, சிறு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|