பதிவு செய்த நாள்
05 மார்2018
00:24
டிஜிட்டல் வாலெட்களை பயன்படுத்துபவர்கள், கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்தால் மட்டுமே இந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின், டிஜிட்டல் வாலெட்கள் பயன்பாடு அதிகரித்தது. இதன் இடையே, டிஜிட்டல் வாலெட்கள் உள்ளிட்ட ப்ரீபைடு பணம் செலுத்தும் சாதனங்களுக்கு, கே.ஒய்.சி., நடைமுறை அவசியம் என, ரிசர்வ வங்கி அறிவித்தது.
இதற்கான கெடு, பிப்., 28ம் தேதியுடன் முடிவடைந்தது.எனவே, கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்த வாடிக்கையாளர்கள் மட்டுமே, இந்த சேவையை தொடர்ந்து பயன்படுத்த முடியும். எனினும், டிஜிட்டல் வாலெட் கணக்கில் உள்ள எஞ்சிய தொகையை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பயன்படுத்தலாம் அல்லது ஒரு முறை வசதிப்படி, வங்கி கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து டிஜிட்டல் வாலெட்களை பயன்படுத்த விரும்பினால் அதற்கேற்ற, கே.ஒய்.சி., நெறிமுறைகளை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|