பதிவு செய்த நாள்
06 மார்2018
01:00
புதுடில்லி:மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், ஆல்டோ கார் விற்பனை, 35 லட்சத்தை தாண்டி, புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவின், மூத்த நிர்வாக இயக்குனர், ஆர்.எஸ்.கல்சி கூறியதாவது:மாருதி சுசூகி நிறுவனத்தின், ஆல்டோ கார் விற்பனை, 35 லட்சத்தை தாண்டி உள்ளது.
2006 முதல், இரு ஆண்டுகளுக்கு, 5 லட்சம் பேர் வீதம், ஆல்டோ கார் வாங்குகின்றனர். 2008ல், 10 லட்சத்தை எட்டிய ஆல்டோ கார் விற்பனை, 2010ல், 15 லட்சமாக அதிகரித்தது.நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், 55 சதவீத வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக, ஆல்டோ கார் உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஆல்டோ கார் விற்பனை, 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது; சந்தை பங்களிப்பு, 33 சதவீதத்தை எட்டியுள்ளது. உள்நாட்டில், 14 ஆண்டுகளாக, அதிகம் விற்பனையாகும் கார்களில், ஆல்டோ, தொடர்ந்து முதலிடத்தை வகிக்கிறது.ஆல்டோ கார் வாடிக்கையாளர்களில், 35 வயதுக்கு உட்பட்டோரின் பங்களிப்பு, 44 சதவீதமாக உள்ளது. இது, மூன்று ஆண்டுகளில், 4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|