பதிவு செய்த நாள்
07 மார்2018
00:15
புதுடில்லி:இந்தியாவில், அடுத்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு துறைகளில், விற்பனை பிரிவில், 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ‘டீம் லீஸ்’ நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
நாட்டில், வேளாண் துறை முதல், அது சாரா துறைகள் வரை, வேலைவாய்ப்புகளில் வேகமான மாற்றங்கள் நடக்கின்றன. அவற்றில் முதன்மையாக, விற்பனை பிரிவு விளங்குகிறது. இப்பிரிவிற்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில், 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
ஆற்றல் உள்ளது. இத்துடன், நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் கணக்கில் வைத்தால், இப்பிரிவு, மூன்று ஆண்டுகளில், 1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை துறையில் தான், வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகின்றன. மொத்தம் உருவாகும் வேலைவாய்ப்புகளில், இப்பிரிவின் பங்களிப்பு, 50 சதவீதமாக இருக்கும்.
பரவலான பொருளாதார வளர்ச்சி, ஜி.எஸ்.டி., அன்னிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்வு போன்ற நிர்வாக சீர்திருத்தங்கள், அதிகரித்து வரும், ‘டிஜிட்டல்’ மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு போன்றவற்றால், பல்வேறு துறைகளில், விற்பனை சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
ஜி.எஸ்.டி., மூலம் மட்டுமே, குறிப்பிட்ட துறைகளில், கூடுதலாக, 12 சதவீத விற்பனை வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அது போல, அன்னிய நேரடி முதலீடு வாயிலாக, 50 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையாளர் பணிகள் உருவாகும்.
பாரம்பரிய துறைகளுடன், மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டமும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மொபைல் போன் வாயிலான வங்கிச் சேவை, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் போன்றவை, புதிய பணிகளை உருவாக்க உதவுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|