பதிவு செய்த நாள்
10 மார்2018
00:30
சென்னை:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு, முறையே, 25 சதவீதம் மற்றும், 10 சதவீதம் சுங்க வரி விதித்துள்ளார்.
இது குறித்து, பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சி கழகத்தின் தலைவர் ரவி செகல் கூறியதாவது:அமெரிக்காவின் வரி விதிப்பால், இந்தியாவின் பொறியியல் துறை ஏற்றுமதி, நேரடியாக இல்லையென்றாலும், மறைமுகமாக பாதிக்கப்படும். பொறியியல் சாதனங்களின் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் இருக்கும்.வர்த்தக தடை, வணிக பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம், இன்றைய நவீன உலகம், மீண்டும், பனிப்போர் காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவை பின்பற்றினால், அது, இந்தியாவின் ஏற்றுமதியை மேலும் பாதிக்கும்.இந்தியா, ஆண்டுக்கு, 50 கோடி டாலர் மதிப்பிலான உருக்கு பொருட்களை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவின் உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு, முறையே, 1.28 சதவீதம் மற்றும், 1.12 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|