பதிவு செய்த நாள்
10 மார்2018
00:36
புதுடில்லி:‘சிமென்ட், உருக்கு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து விலையை உயர்த்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது:சிமென்ட், உருக்கு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து விலையை உயர்த்துவதாக, புகார்கள் வருகின்றன. சிமென்ட் விலை உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானச் செலவு அதிகரித்துள்ளது.கட்டுமான நிறுவனங்களின் பயன்பாட்டு உரிமம், தொழிலாளர்களின் கூலி உள்ளிட்டவை உயராத போது, கட்டுமான பொருட்கள் விலை மட்டும் உயர்ந்துள்ளது.
உருக்கு துறையினரும், விலையை உயர்த்தி விட்டனர். தற்போது, சிமென்ட் விலைக்கு நிகராக, ஆற்று மணல் விலை உள்ளது.நிறுவனங்கள், நியாயமான வகையில் லாபம் சம்பாதிக்கட்டும். அதில், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால், அரசு சும்மாயிருக்காது.
விலையை கட்டுப்படுத்துவது தான் அரசின் கடமை. நிறுவனங்கள் கூட்டாக பேசி, மக்களை பாதிக்கும் வகையில், கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தினால், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கத் தயங்காது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|