பதிவு செய்த நாள்
14 மார்2018
00:55
புதுடில்லி:வலைதளத்தில் விற்கப்படும் போலி பொருட்களால், பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இழப்பீடு தரும் திட்டம் குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு பொருட்களில், போலிகள் அதிகரித்திருப்பது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, வலைதள விற்பனை நிறுவனங்களுடன், மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, வலைதளத்தில் போலி பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இழப்பீடு தரவும் வகை செய்யும் செயல் திட்டம் உருவாக்கப்படும்.போலி பொருட்கள், அறிவுசார் சொத்துரிமைக்கு சவாலாகவும், ‘பிராண்டு’ நிறுவனங்களின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகவும் உள்ளன.அத்துடன், அரசின் வரி வருவாய்க்கும், ‘வேட்டு’ வைத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|