பதிவு செய்த நாள்
14 மார்2018
00:58
மும்பை:எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சேமிப்பு கணக்கில், குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க தவறுவோருக்கான அபராதத்தை குறைத்துள்ளது.இவ்வங்கி, பெருநகரம், சிறுநகரம், கிராமப்புற வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில், பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை, முறையே, 3,000, 2,000 மற்றும், 1,000 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.
இத்தொகை குறைந்தால், அதிகபட்சமாக, 50 ரூபாயுடன், ஜி.எஸ்.டி.,யும் வசூலிக்கப்படுகிறது. இவ்வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச பராமரிப்பு தொகையும், அபராதமும், இதர பொதுத் துறை வங்கிகளை விட, அதிகம் என, ஏராளமானோர், ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளனர்.ரிசர்வ் வங்கியும், ‘வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், நியாயமான தொகை வசூலிக்க வேண்டும்’ என, அறிவுறுத்தியது.இதையடுத்து, குறைந்தபட்ச இருப்பு வரம்பை, எஸ்.பி.ஐ., குறைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., குறைந்தபட்ச இருப்பு வரம்பை குறைக்காமல், அபராதத்தை மட்டும், 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது, ஏப்., 1 முதல் அமலுக்கு வருவதாக, இவ்வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, எஸ்.பி.ஐ., நிர்வாக இயக்குனர், பி.கே.குப்தா கூறுகையில், ‘‘குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க விரும்பாத வாடிக்கையாளர்கள், வங்கி கிளையை அணுகி, பூஜ்ஜிய இருப்பு வசதி கொண்ட, பி.எஸ்.பி.டி., எனப்படும், அடிப்படை சேமிப்பு கணக்கு சேவைக்கு மாறலாம்,’’ என்றார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|