அதிக இழப்பை சந்தித்த பி.எஸ்.என்.எல்., ஏர்  – இந்தியாஅதிக இழப்பை சந்தித்த பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா ... மீண்டும் சவரன் ரூ.23,300 ஐ கடந்தது தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.23,300 ஐ கடந்தது தங்கம் விலை ...
மத்திய அரசு நடவடிக்கை:வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு தனி சரக்கு விமான சேவை கொள்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2018
01:03

புதுடில்லி:‘‘வேளாண் பொருட்கள் ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்க, பிரத்­யேக சரக்கு விமான சேவை கொள்கை உரு­வாக்­கப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்து உள்­ளார்.
விமான போக்­கு­வ­ரத்து துறை அமைச்­ச­ராக, கூடு­தல் பொறுப்­பேற்­றுள்ள அவர், டில்­லி­யில், சர்­வ­தேச உணவு பதப்­ப­டுத்­து­தல் மற்­றும் விருந்­தோம்­பல் மாநாட்­டில் பேசி­ய­தா­வது:விவ­சா­யி­கள் உற்­பத்தி செய்­யும் வேளாண் பொருட்­கள், மிக விரை­வாக சந்­தையை அடைய வேண்­டும்.இத­னால், விவ­சாய பொருட்­கள் அழுகி வீணா­வது தடுக்­கப்­படும். விவ­சா­யி­களின் விளை பொருட்­க­ளுக்­கும் நல்ல விலை கிடைக்­கும்.
வாழ்வாதாரம்விவ­சா­யி­கள் உற்­பத்தி செய்­யும் பொருட்­கள், வேளாண் மையங்­க­ளுக்கு விரை­வாக எடுத்­துச் செல்­லப்­பட வேண்­டும். இந்த மையங்­களில் இருந்து, வேளாண் பொருட்­களை சுல­ப­மாக ஏற்­று­மதி செய்­யும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.
அதற்­கான செயல் திட்­டத்தை உரு­வாக்­கும்­படி, விமான போக்­கு­வ­ரத்து துறை அதி­கா­ரி­களை கேட்­டுக் கொண்­டுள்­ளேன். இத்­திட்­டம், விவ­சா­யி­க­ளுக்­கும், வேளாண் துறை வளர்ச்­சிக்­கும் உத­வும்.வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வரைவு கொள்கை தயா­ராகி உள்­ளது.இது குறித்து கருத்து தெரி­விக்­கக் கோரி, அனைத்து அமைச்­ச­கங்­களும் கேட்­டுக் கொள்­ளப்­பட்டு உள்ளன. இக்­கொள்கை, விவ­சா­யி­களின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­தும். ஒட்­டு­மொத்த வேளாண் துறை­யின் வளர்ச்­சிக்­கும் வழி­வ­குக்­கும்.
நிதியம்
இத்­து­டன், விருந்­தோம்­பல், சுற்­றுலா, தக­வல் தொழில்­நுட்­பம் உட்­பட, 12 முக்­கிய துறை­களின் வளர்ச்­சிக்­கும், செயல் திட்­டம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இத்­திட்­டத்­திற்கு, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, சமீ­பத்­தில் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.இத்­திட்­டத்­தின் கீழ், தனி நிதி­யம் ஏற்­ப­டுத்­தப்­படும். இதை­ய­டுத்து, துறை வாரி­யாக, வளர்ச்சி திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­படும்.ஒவ்­வொரு துறை­யின் வளர்ச்­சிக்­கும், ஒருங்­கி­ணைந்த செயல் திட்­டம் உரு­வாக்­கப்­படும். இதன் மூலம், அந்­தந்த துறை­களின் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்­சிக்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
அறி­வு­சார் சொத்­து­ரிமை மோசடி தொடர்­பாக எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து, போலீ­சா­ருக்கு தெளி­வான வழி­காட்­டு­தலை வழங்க வேண்­டும். இதற்கு, அறி­வு­சார் சொத்­து­ரிமை சட்­டங்­களின் அடிப்­ப­டை­யில் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்த வரை­வ­றிக்கை தயா­ரிக்­கும்­படி, தொழில் கொள்கை மற்­றும் வளர்ச்சி துறை­யி­டம் கேட்­டுக் கொள்­ளப்­பட்டு உள்­ளது. ஒவ்­வொரு மாநி­ல­மும், கணினி மோசடி தடுப்பு பிரிவை உரு­வாக்க வேண்­டும்.சுரேஷ் பிரபு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்
புதிய கண்­டு­பி­டிப்­பு­களை ஊக்­கு­விக்க, அறி­வு­சார் சொத்­து­ரிமை சட்­டங்­கள் அவ­சி­யம். இதில், இந்­தி­யா­வும், ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பும் இணைந்து செயல்­ப­ட­லாம்.தோமஸ் கோஸ்லோவ்ஸ்கி இந்தியாவுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் துாதர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)