பதிவு செய்த நாள்
14 மார்2018
01:03
புதுடில்லி:‘‘வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க, பிரத்யேக சரக்கு விமான சேவை கொள்கை உருவாக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
விமான போக்குவரத்து துறை அமைச்சராக, கூடுதல் பொறுப்பேற்றுள்ள அவர், டில்லியில், சர்வதேச உணவு பதப்படுத்துதல் மற்றும் விருந்தோம்பல் மாநாட்டில் பேசியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள், மிக விரைவாக சந்தையை அடைய வேண்டும்.இதனால், விவசாய பொருட்கள் அழுகி வீணாவது தடுக்கப்படும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்கும்.
வாழ்வாதாரம்விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள், வேளாண் மையங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்த மையங்களில் இருந்து, வேளாண் பொருட்களை சுலபமாக ஏற்றுமதி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான செயல் திட்டத்தை உருவாக்கும்படி, விமான போக்குவரத்து துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். இத்திட்டம், விவசாயிகளுக்கும், வேளாண் துறை வளர்ச்சிக்கும் உதவும்.வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான வரைவு கொள்கை தயாராகி உள்ளது.இது குறித்து கருத்து தெரிவிக்கக் கோரி, அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன. இக்கொள்கை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். ஒட்டுமொத்த வேளாண் துறையின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
நிதியம்
இத்துடன், விருந்தோம்பல், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் உட்பட, 12 முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கும், செயல் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவைக் குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ், தனி நிதியம் ஏற்படுத்தப்படும். இதையடுத்து, துறை வாரியாக, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும், ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், அந்தந்த துறைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அறிவுசார் சொத்துரிமை மோசடி தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, போலீசாருக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இதற்கு, அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வரைவறிக்கை தயாரிக்கும்படி, தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலமும், கணினி மோசடி தடுப்பு பிரிவை உருவாக்க வேண்டும்.சுரேஷ் பிரபு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்
புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் அவசியம். இதில், இந்தியாவும், ஐரோப்பிய கூட்டமைப்பும் இணைந்து செயல்படலாம்.தோமஸ் கோஸ்லோவ்ஸ்கி இந்தியாவுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் துாதர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|