பதிவு செய்த நாள்
16 மார்2018
01:00
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி குழுமத்தின் துணை நிறுவனமாக உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், பங்குத் தரகு உள்ளிட்ட, நிதிச் சேவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், அதன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்கிறது. இப்பங்கு வெளியீடு, 22ல் துவங்கி, 26ல் முடிவடைகிறது. மொத்தம், 7.72 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன.
பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 519 ரூபாய்; அதிகபட்ச விலை, 520 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனம், 4,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம், 28 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்கு முதலீட்டாளர்களுக்கு, 38.62 லட்சம் பங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|