பதிவு செய்த நாள்
20 மார்2018
01:58
புதுடில்லி : சீனாவைச் சேர்ந்த, எஸ்.ஏ.ஐ.சி., குழுமத்தின் துணை நிறுவனமான, எம்.ஜி., மோட்டார் இந்தியா, வாகன தயாரிப்பு பிரிவில், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராஜிவ் சபா கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, குஜராத் மாநிலம், ஹலால் பகுதியில் உள்ள, வாகன தொழிற்சாலை கையகப்படுத்தப்பட்டது. இதன் விரிவாக்கத்திற்காக, ஏற்கனவே, 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு ஒரு புதிய வாகனத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இதற்காக, அடுத்த, 5 – 6 ஆண்டுகளில், 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்தியாவில், 2018 – 19ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் முதல், எஸ்.யு.வி., வாகனத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.
தற்போது நிறுவனத்தில், 150 பேர் பணிபுரிகின்றனர். இது, இந்தாண்டு இறுதிக்குள், 1,000 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|