பதிவு செய்த நாள்
21 மார்2018
00:28
புதுடில்லி : ‘‘வங்கி வாரியம் அளித்த பரிந்துரைகளை, மத்திய நிதியமைச்சகம் மதிப்பதில்லை,’’ என, வங்கி வாரிய தலைவர், வினோத் ராய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பொதுத் துறை வங்கிகளில் சீர்திருத்தம் செய்யும் நோக்கில், 2016ல் வங்கி வாரியம் அமைக்கப் பட்டது.
வங்கி இயக்குனர் குழு நியமனங்களை முறைப்படுத்துவது, வங்கி வர்த்தகத்தை மேம்படுத்துவது, வங்கிகளை ஒன்றிணைப்பது உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை, வாரியம் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும்.அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுத் துறை வங்கிகளை பலப்படுத்த, வாரியம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. ஆனால், இது குறித்து நிதியமைச்சகத்திடம் இருந்து எந்தவொரு ஆக்கபூர்வ பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த, 2017 ஜூலையில், ஏற்கனவே அளித்த பரிந்துரைகளின்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கடிதத்திற்கும் பதில் இல்லை. தற்போது, பெயரளவிற்கு தான் வங்கி வாரியம் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் துறை வங்கிகளின் அதிகாரம் குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அதிருப்தி தெரிவித்த நிலையில், வங்கி வாரியமும், புகார் தெரிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|