பதிவு செய்த நாள்
22 மார்2018
00:13
பெங்களூரு : ‘‘நாட்டில், வரி செலுத்துவோரின் நலன் கருதி, பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கலாம்,’’ என, இன்போசிஸ் செயல்சாரா தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வங்கிகள், 50 ஆண்டுகளுக்கு முன், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை புறக்கணித்து விட்டு, பெரிய நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்கி வந்தன. இதன் காரணமாகவே, வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதையடுத்து, பொதுத் துறை வங்கிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் தாராளமாக கடன் வழங்கும் சூழல் உருவானது.
தற்போது, பொதுத் துறை வங்கிகளின் நிலைப்பாடு மாறிவிட்டது. எந்த உண்மையான காரணத்திற்காக அவை உருவாக்கப்பட்டனவோ, அதற்கு அர்த்தமில்லாத வகையில், பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் உள்ளன. பெரிய நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியதால், பொதுத் துறையைச் சேர்ந்த, 21 நிறுவனங்கள் தத்தளிக்கின்றன.
எனவே, பொதுமக்களின் பங்களிப்புடன் தீர்மானிக்கப்படும், நிதிச் சந்தை கொள்கைகளை, பொதுத் துறை வங்கிகள் பின்பற்றவது நல்லது. இதற்காக, இவ்வங்கிகளை தனியார் மயமாக்கலாம். வரி செலுத்துவோரின் நலன் கருதி, இந்த முடிவு எடுக்கலாம்.
பொதுத் துறை வங்கிகளில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 70 சதவீதம் அளவிற்கு உள்ளதால், இந்த யோசனையை பரிசீலிக்கலாம்.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் பெறுவதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை அறிமுகப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
100 கோடியை எட்டும்:
அடுத்த ஓராண்டில், வெற்றிலை பாக்கு வாங்க கூட, மொபைல்போனில், ‘க்யூஆர் – கோடு’ ஸ்கேன் செய்து, பணம் செலுத்துவது பரவலாகும். 2016, அக்டோபரில், ‘யு.பி.ஐ.,’ பரிவர்த்தனை, 1 லட்சமாக இருந்தது. இது, 2018 பிப்ரவரியில், 17.20 கோடியாக உயர்ந்துள்ளது; டிசம்பரில், 100 கோடியை எட்டும்.
-நந்தன் நிலேகனி, செயல்சாரா தலைவர், இன்போசிஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|