பதிவு செய்த நாள்
23 மார்2018
02:36
ஐதராபாத் : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதனுடன் இணைக்கப்பட்ட ஐந்து வங்கிகளின் வாடிக்கையாளர்களை, மார்ச், 31க்குள், புதிய காசோலை புத்தகங்களுக்காக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, சமூக வலைதளமான, ‘டுவிட்டரில்’ எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள செய்தியில், ‘எஸ்.பி.ஐ., உடன் இணைக்கப்பட்ட, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் – ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஐந்து வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மார்ச், 31க்குள், புதிய காசோலை புத்தகங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏப்., 1ம் தேதி முதல், பழைய வங்கிகளின் காசோலை புத்தகங்கள் செல்லாது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், எஸ்.பி.ஐ., உடன், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் – ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் ஆகிய துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|