‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’ ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.19 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.19 ...
பட்டு தொழில் வளர்ச்சிக்கு புதிய செயல் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2018
02:40

புதுடில்லி : மத்­திய அரசு, பட்டு வளர்ப்பு துறைக்கு என, ‘பட்­டுத் தொழில் மேம்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைந்த திட்­டம்’ என்ற செயல் திட்­டத்தை உரு­வாக்­கி­யுள்­ளது.

அடுத்த மூன்று ஆண்­டு­களில், 2,161.88 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், நிறை­வேற்­றப்­பட உள்ள இத்­திட்­டத்­திற்கு, பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான மத்­திய அமைச்­ச­ரவை குழு, நேற்று ஒப்­பு­தல் வழங்­கி­யது.

இது குறித்து, மத்­திய ஜவுளி துறை அமைச்­சர், ஸ்மி­ருதி இரானி கூறி­ய­தா­வது: கடந்த, 2016- – 17ம் நிதி­யாண்­டில், நாட்­டின் பட்டு உற்­பத்தி, 30 ஆயி­ரத்து, 348 டன்­னாக இருந்­தது. இதை, 2019 -– 20ல், 38 ஆயி­ரத்து, 500 டன்­னாக உயர்த்த, பட்­டுத் தொழில் மேம்­பாட்­டிற்­கான ஒருங்­கி­ணைந்த திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. பட்­டுத் துறை­யில் ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் மூலம், நவீன தொழில்­நுட்­பங்­களை புகுத்தி, தர­மான பட்டு வகை­களை உரு­வாக்­க­வும், பட்டு உற்­பத்­தியை பெருக்­க­வும், வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்­க­வும் இந்த திட்­டம் உத­வும். மேலும், சீனா­வின் உயர்­தர பட்டு இறக்­கு­ம­தியை குறைத்து, அதற்கு நிக­ரான தரத்­தில் உள்­நாட்­டில் பட்டு உற்­பத்தி மேற்­கொள்ள துணை புரி­யும்.

ஏற்­க­னவே, ‘ஹைபி­ரிட்’ தொழில்­நுட்­பம்; கோடை மற்­றும் குளிர் காலம் என, இரு வகை தட்­ப­வெப்ப நிலை­யில், பட்­டுப் புழு வளர்ப்­ப­தில், நாடு முன்­னேற்­றம் கண்­டுள்­ளது. இதன் மூலம், உயர் தர­மான பட்டு உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தால், 2013 -– 14ல், 7,000 டன்­னாக இருந்த சீனப் பட்டு இறக்­கு­மதி, 2016 -– 17ல், 3,700 டன்­னாக குறைந்­துள்­ளது. இதே காலத்­தில், உயர்­தர பட்டு உற்­பத்தி, 2,559 டன்­னில் இருந்து, 5,266 டன்­னாக உயர்ந்­துள்­ளது. இது, நடப்பு நிதி­யாண்­டில், 6,200 டன்­னாக அதி­க­ரிக்­கும்.

புதிய திட்­டத்­தின் மூலம், இந்த உற்­பத்­தியை, 2020ல், 8,500 டன்­னாக அதி­க­ரிக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. உயர் வகை பட்டு உற்­பத்தி, 2022ல், 12 ஆயி­ரம் டன்னை எட்­டும்­பட்­சத்­தில், அதன் இறக்­கு­ம­திக்கு, சீனாவை நாட வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது. தற்­போது, 1 ஹெக்­ட­ரில், 100 கிலோ பட்­டு உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிறது. இது, பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு பணி­கள் மூலம், 2019 – -20ல், 111 கிலோ­வாக அதி­க­ரிக்­கும். இத்­து­டன், தற்­போது, 85 லட்­சம் என்ற அள­வில் உள்ள, பட்டு வளர்ப்பு துறை­யின் வேலை­வாய்ப்பு, ஒரு கோடி­யாக உய­ரும்.

குறிப்­பாக, பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பை­யும், தாழ்த்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­னர் மற்­றும் பொரு­ளா­தா­ரத்­தில் பின்­தங்­கி­யுள்­ளோ­ரின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­த­வும், இத்­திட்­டம் துணை புரி­யும். உயர்­தர பட்­டுப் புழு, பட்­டுக் கூடு, கச்சா பட்டு ஆகி­ய­வற்றை உரு­வாக்க, பட்­டுக் கூடு ஆய்வு மையங்­கள் மற்­றும் பட்டு பரி­சோ­தனை மையங்­கள் ஏற்­ப­டுத்­தப்­படும்.மொத்­தத்­தில், 2022ல், நாடு, பட்டு உற்­பத்­தி­யில் தன்­னி­றைவு பெற, இத்­திட்­டம் உத­வும். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

ஐந்து மாநிலங்கள்:
உல­கில், பட்டு உற்­பத்­தி­யில் சீனா முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்­துள்ள இந்­தி­யா­வில், 97 சத­வீ­தம் கச்சா மல்­பரி பட்டு வகை­கள், தமி­ழ­கம், ஆந்­திரா, கர்­நா­டகா, ஜம்மு – காஷ்­மீர், மேற்கு வங்­கம் ஆகிய, ஐந்து மாநி­லங்­களில் உற்­பத்­தி­யா­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)