பதிவு செய்த நாள்
06 ஏப்2018
16:00
மும்பை : சீனா மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதால், இரு நாடுகளிடையே வர்த்தக போர் உருவாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தைகள் நெருக்கடியில் சிக்கி உள்ளன.
இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்று துவக்கம் முதலே சரிவுடன் காணப்பட்டன. இருப்பினும் நிதித்துறை மற்றும் ஆட்டோ துறை பங்குகளின் மதிப்பு வெகுவாக உயர்ந்ததை அடுத்து பிற்பகல் வர்த்தகத்தின் இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. இதனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 30.17 புள்ளிகள் உயர்ந்து 33,626.97 புள்ளிகளாகவும், நிப்டி 6.40 புள்ளிகள் உயர்ந்து 10,331.60 புள்ளிகளாகவும் இருந்தன.
டைட்டன், பிபிசிஎல், எச்பிசிஎல், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்சிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இன்போசிஸ், என் அண்ட் டி, பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|