பதிவு செய்த நாள்
07 ஏப்2018
00:55
புதுடில்லி:'ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், டிஜிட்டலுக்கு மாற ஆர்வமாக இல்லை' என, 'கார்ன் பெரி' நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.இந்நிறுவனம், ஒன்பது ஆசிய பசிபிக் நாடுகளைச் சேர்ந்த, 2,600 இந்திய தொழிலதிபர்கள் உட்பட, 9,000க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களிடம் ஆய்வு நடத்தியது.
அதன் விபரம்:இந்தியாவில், டிஜிட்டலுக்கு மாற தேவையான வசதிகள் இருந்தாலும், ஒரு சில சூழ்நிலைகளில், டிஜிட்டலுக்கு மாற நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இது, அந்நிறுவனங்கள் டிஜிட்டல் சூழலில் தொடர விருப்பம் இல்லாததையே காட்டுகிறது.மேலும், இந்தியாவில், நிர்வாகிகள் தங்கள் நிறுவனங்களில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்த, முதலில் அவர்களிடம் மனமாற்றங்கள் ஏற்பட வேண்டும்.டிஜிட்டலுக்கு மாறுவது என்பது, மிகப்பெரிய கலாசார மாற்றம். ஒரு சிலர் மாறுவதால், அது நிறைவு பெறாது. நிறுவனத்தில் உள்ள உயரதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை மாறினால் மட்டுமே அது சாத்தியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|