பதிவு செய்த நாள்
09 ஏப்2018
10:13
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று (ஏப்.,09) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதாலும், நெருக்கடியில் உள்ள ஆசிய நிறுவன பங்குகளை வாங்க உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரப்படி) சென்செக்ஸ் 136.45 புள்ளிகள் உயர்ந்து 33,763.42 புள்ளிகளாகவும், நிப்டி 47.65 புள்ளிகள் உயர்ந்து 10,379.25 புள்ளிகளாகவும் உள்ளன. உலோகம், கட்டுமானம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
கோட்டாக் வங்கி, யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆசியன் பெயின்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, விப்ரோ, மாருதி சுசுகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதே சமயம் ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|