கூடங்குளம் அணு மின் நிலைய திட்டம்:ரிலையன்சுக்கு ரூ.1,081 கோடி, ‘ஆர்டர்’கூடங்குளம் அணு மின் நிலைய திட்டம்:ரிலையன்சுக்கு ரூ.1,081 கோடி, ‘ஆர்டர்’ ... உச்­சத்­தில் கன­காம்­ப­ரம் ஆறு­தல் தந்த மல்லி உச்­சத்­தில் கன­காம்­ப­ரம் ஆறு­தல் தந்த மல்லி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பொது துறை நிறுவன பங்குகள் விற்பனை:‘செபி’யிடம் அவகாசம் கேட்க அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2018
05:15

புதுடில்லி;பொதுத் துறை நிறு­வ­னங்­களில், பொது பங்கு மூல­தன வரம்­புக்கு அளித்­துள்ள அவ­கா­சத்தை, மேலும் நீட்­டிக்­கு­மாறு, ‘செபி’யிடம், மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் விண்­ணப்­பிக்க உள்­ளது.பொதுத் துறை நிறு­வ­னங்­களில், சில்­லரை முத­லீட்­டா­ளர்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­க­வும், அந்­நி­று­வ­னங்­களின் பங்கு விற்­பனை மூலம், அரசு வரு­வாய் ஈட்­ட­வும், 2014 ஜூனில், ஓர் உத்­த­ரவை செபி பிறப்­பித்­தது.
அதில், ‘பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­களின் பங்­கு­களில், நிறு­வ­னர்­கள் சாரா­மல், பொது முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, குறைந்­த­பட்­சம், 25 சத­வீத பங்­கு­கள் ஒதுக்க வேண்­டும்’ என, தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.இதன்­படி, 2017, ஆக., 21க்குள், பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள, பொதுத் துறை நிறு­வ­னங்­கள், பங்­கு­களை ஒதுக்­கி­யி­ருக்க வேண்­டும். ஆனால், அவ்­வாறு செய்­யா­த­தால், ஓராண்டு அவ­கா­சம் அளிக்­கப்­பட்­டது. அதன்­படி, வரும் ஆக., 21க்குள், பொதுத் துறை நிறு­வ­னங்­கள், பங்­கு­களை ஒதுக்க வேண்­டும்.
இது குறித்து, மத்­திய நிதி­ய­மைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:செபி உத்­த­ர­வுப்­படி, அடுத்த ஐந்து மாதங்­க­ளுக்­குள், பொதுத் துறை­யைச் சேர்ந்த, 12க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள், தலா, 25 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்ய வேண்­டும். அது, இய­லாத காரி­யம் என, அரசு கரு­து­கிறது.ஏனெ­னில், ஒரு சில பொதுத் துறை நிறு­வ­னங்­களில், பெரும்­பான்மை பங்­கு­களை விற்­பனை செய்­வ­தற்­கான முயற்சி நடை­பெ­று­கிறது. சில நிறு­வ­னங்­களின் இணைப்பு நட­வ­டிக்­கை­கள் தொடர்­பா­க­வும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கிறது.அத­னால், பங்கு வரம்பை குறைக்க, மேலும் அவ­கா­சம் அளிக்­கு­மாறு, செபி­யி­டம் விண்­ணப்­பிக்­கப்­படும் என, தெரி­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
எப்படி உயர்த்தலாம்?
பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள், பங்கு விற்­பனை மூலம், பொது முத­லீட்­டா­ளர்­களின் பங்கு மூல­த­னத்தை, குறைந்­த­பட்­சம், 25 சத­வீ­த­மாக உயர்த்த, பல வழி­கள் உள்ளன.பொது பங்கு வெளி­யீடு; ஏல முறை பங்கு விற்­பனை; நிறு­வ­னர்­கள், நிறு­வ­னங்­க­ளுக்­கான ஒதுக்­கீட்டு பிரி­வில், பங்­கு­களை விற்­பனை செய்­வது போன்ற வழி­மு­றை­களை நாட­லாம். மேலும், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு உரி­மைப் பங்­கு­களை வெளி­யிட்­டும், ‘போனஸ்’ பங்­குளை வழங்­கி­யும், பங்கு மூல­த­னத்தை குறைத்­துக் கொள்­ள­லாம்.தகு­தி­யுள்ள நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரி­வில், நிறு­வ­னர்­கள் அல்­லது நிறு­வ­னர்­களை உள்­ள­டக்­கிய குழுக்­கள், 2 சத­வீ­தம் வரை, மொத்­த­மாக விற்­பனை செய்­ய­வும் வழி உள்­ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)