பதிவு செய்த நாள்
12 ஏப்2018
00:40
அரூர்:அரூர் அருகில் உள்ள, புளுதியூர் புதன் சந்தையில், 70 லட்சம் ரூபாய்க்கு, மாடுகள் விற்பனையாகின.
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த, புளுதியூரில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இதில், ஆடு, மாடு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் விற்பனைக்கு வருவது வழக்கம்.நேற்று, சந்தைக்கு கலப்பின மற்றும் ஜெர்சி வகையைச் சேர்ந்த, 190 மாடுகள் மற்றும் கன்றுகள் விற்பனைக்கு வந்தன. கலப்பின மாடு ஒன்று, 21 ஆயிரம் ரூபாய் முதல், 44 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனையானது.
அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 2,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று நடந்த சந்தை விற்பனைக்கு, அதிகமான மாடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்; 70 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|