பதிவு செய்த நாள்
13 ஏப்2018
01:17
மக்களின் நுகர்வு குறைந்ததால் காய்கறி, பழம் மற்றும் மலர் சந்தைகளில் பொருட்களின் விலை குறைந்த நிலையிலேயே உள்ளது.
காய்கறி
கோயம்பேடு காய்கறி சந்தையில், பச்சைப் பட்டாணி ஒரு கிலோ, 80 ரூபாயாக உள்ளது. 25 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ், 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. மற்றபடி, முட்டைகோஸ், பீட்ரூட், பெரிய வெங்காயம், வாழை உள்ளிட்டவை, 8 – 15 ரூபாயாக உள்ளது.சேப்பங்கிழங்கு, 60 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய், 50 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக குறைந்துள்ளது. சின்ன வெங்காயம், புடலங்காய், 20 ரூபாய்க்கு விற்பனையாகின. வாழைக்காய், 5 –- 8 ரூபாயாக உள்ளது. முருங்கைக்காய், 5 உள்ள கட்டு, 5 – -10 ரூபாய்க்கு விற்பனையாகின.புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவை ஒரு ரூபாய்க்கு விலை குறைந்து காணப்பட்டது. சோளம் ஒரு கிலோ, 20 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ, 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டன.மாங்காய் வகைகளில் ஆந்திராவில் இருந்து வரத்து துவங்கியுள்ளது. இதில், கிளிமூக்கு, நாட்டு மாங்காய், ருமானி, உள்ளிட்ட மாங்காய் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் விலை ஒரு கிலோ,30 – 40 ரூபாய் வரை உள்ளது.
பழ வகைகள்
நுகர்வு குறைந்ததால், 2வது நாளாக திராட்சை விலை குறைந்தே காணப்பட்டது. 10 கிலோ திராட்சை, 400 –- 500 வரை விற்பனையாகின. மாதுளை, 10 கிலோ 1,300 ரூபாய்க்கு விற்பனையானது. சாத்துக்குடி ஒரு கிலோ, 41 – 48 ரூபாயாக இருந்தது.ஆந்திராவில் இருந்து கிர்ணிப்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. மொத்த விலையில் குறைந்தபட்சம் ஒரு கிலோ, 10 ரூபாய்க்கு விற்பனையானது. கேரளாவில் இருந்து வந்துள்ள அன்னாசி சில்லரை விலையில் ஒரு கிலோ, 40 ரூபாயாக உள்ளது. கமலா வரத்து முற்றிலும் நின்று விட்டது. தற்போது ஏற்றுமதி ரக கமலா வகைகளே விற்பனைக்கு வருகின்றன. பொள்ளாச்சி, கேரளாவில் இருந்து வரும் பலாப்பழம், ஒரு கிலோ, 40 ரூபாயாக உள்ளது.
மலர் வகைகள்
கோயம்பேடு மலர் சந்தையில், மல்லி விலை, 2வது நாளாக குறைந்தே காணப்பட்டது. ஒரு கிலோ மல்லி, 180 – 250 வரை விற்பனையானது. சாமந்தி, 200 – 400 ரூபாய் வரையிலும், கனகாம்பரம் ஒரு கிலோ தரத்திற்கு ஏற்ப, 200 – 600 ரூபாய் வரையிலும் விற்பனையாகின.ரோஜா ஒரு கிலோ, 30 – 80 ரூபாய் வரை விற்பனையானது. சென்டை ஒரு கிலோ, 60 ரூபாயாக இருந்தது. தாமரை ஐந்து பூ, 10 ரூபாயாக விற்பனையானது. அலங்காரத்திற்கு பயன்படும் டேரி வகை மலர் ஒரு கிலோ, 80 ரூபாயாகவும், கோழிக்கொண்டை ஒரு கிலோ, 40 ரூபாயாகவும் இருந்தன.மொத்தத்தில், மக்களுக்கு பாக்கெட்டை அதிகம் பதம் பார்க்காத வகையிலும், வியாபாரிகளுக்கு சுமாராகவும் கோயம்பேடு சந்தை நேற்று இருந்தது.
-– நமது நிருபர் –-
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|