பதிவு செய்த நாள்
13 ஏப்2018
01:20
புதுடில்லி:‘4ஜி’ வசதி உள்ள சிம் கார்டுடன் கூடிய, ‘லேப் – டாப்’களை தயாரிப்பது குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, குவால்கம் நிறுவனத்துடன், ரிலையன்ஸ் ஜியோ பேச்சு நடத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில், ஸ்மார்ட் போன்களுக்கான, ‘௪ஜி’ இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.இந்நிலையில் இந்நிறுவனம், ‘4ஜி’ வசதியுடன் கூடிய, லேப் – டாப்களை தயாரிப்பது குறித்து, குவால்கம் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிகிறது.
ஏற்கனவே, குவால்கம் நிறுவனம், ரிலையன்சின், ‘௪ஜி’ பியூச்சர் போன்களுக்கான சிம் தயாரிப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும், 50 லட்சம், லேப் – டாப்கள் விற்பனையாகின்றன. இவை, நிறுவனங்கள், வீடு அல்லது பொது இடங்களில் உள்ள, ‘வை – பை’ மூலம் இணைய வசதி பெற்று இயங்குகின்றன.
லேப் – டாப்பில், ‘4ஜி’ சிம் பொருத்தி ஆர்ஜியோ விற்பனை செய்தால், அதன் வர்த்தகம் மேலும் வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|