பதிவு செய்த நாள்
14 ஏப்2018
00:18
சென்னை:உள்ளூர் உற்பத்தி தரமற்று இருப்பதாலும், இறக்குமதி ரகம் வராததாலும், பாசிப்பருப்பு, பட்டாணிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சென்னை, கொத்தவால்சாவடி உணவு தானிய விற்பனை சந்தையில், சர்க்கரை விலை, 50 கிலோவுக்கு, 30 ரூபாய் குறைந்து உள்ளது. நேற்று முன்தினம், 50 கிலோ சர்க்கரை, 1,680 ரூபாயாக இருந்தது. நேற்று, 1,650 ஆக குறைந்துள்ளது.பாசிப்பருப்பு, பட்டாணிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:அமெரிக்காவில் இருந்து வரும் பச்சை மற்றும் வெள்ளை பட்டாணி ரகம் இந்தாண்டு வரவில்லை. உள்ளூர் உற்பத்தியும் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது.இதனால், தரமான பட்டாணிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது இதன் விலை, 1 கிலோ, 80 ரூபாயாக உள்ளது.பாசிப்பருப்பு இருப்பு குறைந்து வருவதால், இதற்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.கடந்த வாரம் இதன் விலை, 63 – 67 ஆக இருந்தது. தற்போது இதன் விலையும், 70 வரை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|