பதிவு செய்த நாள்
14 ஏப்2018
00:27
புதுடில்லி:கடந்த ஜனவரி – மார்ச் வரையிலான காலாண்டில், 1,853 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நிறுவனங்கள் இடையே, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இது குறித்து, கிரான்ட் தார்ன்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மார்ச்சில், 31 நிறுவனங்கள் இடையே, 149.90 கோடி டாலர் மதிப்பிற்கு, இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, 2017, மார்ச்சில் அறிவிக்கப்பட்ட, 2,382 கோடி டாலர் மதிப்பிலான, 28 பரிவர்த்தனைகளின் மதிப்பை விட குறைவாகும்.
இந்தாண்டு, ஜனவரி – மார்ச் வரையிலான காலாண்டில், 1,853 கோடி டாலர் மதிப்பிலான, 118 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.கடந்த ஆண்டு, இதே காலத்தில், நிறுவனங்கள் இடையே, 2,748 கோடி டாலர் மதிப்பில், 105 ஒப்பந்தங்கள் ஏற்பட்டன.இதே காலத்தில், உள்நாட்டு நிறுவனங்கள் இடையிலான, இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தங்கள், 5.3 மடங்கு அதிகரித்துள்ளன. இவற்றின் மதிப்பு,300 கோடி டாலர் ஆகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|