பதிவு செய்த நாள்
15 ஏப்2018
00:04
புதுடில்லி:கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, ‘பான் கார்டு’ எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் தொடர்பான விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
மத்திய நிறுவன விவகாரங்கள் துறையில், நிறுவனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு நிறுவனம், பதிவிற்கான விண்ணப்பத்துடன், ‘பான்’ மற்றும், ‘டான்’ எனப்படும் வரி பிடித்தம் மற்றும் வரி வசூல் கணக்கு எண்கள் ஒதுக்கக் கோரி, பொது விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த இரு எண்கள் கொண்ட, நிறுவன பதிவு சான்றிதழை, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் வழங்குகிறது.இந்த சான்றிதழே, ஒரு நிறுவனத்தின் பான் மற்றும் டான் கணக்கிற்கு போதுமான சான்றாக, வருமான வரி துறை எடுத்துக் கொள்ளும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதனால், மத்திய நிறுவன விவகாரங்கள் துறையின், பதிவு சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள், வருமான வரி சட்டம், 139ன் பிரிவின் கீழ், தனியே பான் எண் கோரி விண்ணப்பிக்க தேவையில்லை.நிறுவனங்களுக்கு, ‘லேமினேட்’ செய்யப்பட்ட பான் கார்டு வழங்கும் விதிமுறை, நிதிச் சட்ட திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|