பதிவு செய்த நாள்
17 ஏப்2018
06:25
புதுடில்லி : பிரேசில், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து, பெயின்ட் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் சில வகை ரசாயனங்கள் அதிக அளவில் இறக்குமதி ஆவதாக, கூறப்படுகிறது.
குறைந்த விலையில், அளவிற்கு அதிகமாக இறக்குமதியாகும் ரசாயனங்களால் பாதிக்கப்படுவதாக, உள்நாட்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்திருந்தன. இதையடுத்து, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவான, அதிக பொருள் குவிப்பு மற்றும் வரிகள் தலைமை இயக்குனரகம், ஆய்வு மேற்கொண்டது. அதில், புகாருக்கு அடிப்படை ஆதாரம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 2016 ஏப்., – 2017 செப்., வரை, மூன்று நாடுகளின் ரசாயன இறக்குமதி குறித்த விசாரணையை துவக்கியுள்ளதாக, இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணையில், உள்நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது நிரூபணமானால், மூன்று நாடுகளின் ரசாயன இறக்குமதிக்கு, அதிக பொருள் குவிப்பு வரி விதிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|