இயற்கை எரிவாயு வர்த்தக சந்தை ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்புஇயற்கை எரிவாயு வர்த்தக சந்தை ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ...
வாராக்கடன் விதிகளை தளர்த்த திட்டம்; சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிம்மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2018
06:31

புதுடில்லி : வங்கி இடர்­பாட்டு கடன் விதி­மு­றை­கள் கடு­மை­யாக உள்­ள­தாக, மத்­திய அர­சும், வங்­கி­களும் தெரி­வித்­ததை அடுத்து, அவற்றை தளர்த்த ரிசர்வ் வங்கி திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

வங்­கி­க­ளின் வாராக் கடன் சுமை­யைக் குறைக்க, ரிசர்வ் வங்கி, பிப்., 12ல், புதிய விதி­மு­றை­களை அறி­வித்­தது.அவற்­றில், இடர்­பாட்டு கடன் தவ­ணையை திரும்­பச் செலுத்­து­வ­தற்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட, ‘கெடு’ குறித்து, மத்­திய அர­சும், வங்­கி­களும் அதி­ருப்தி தெரி­வித்­தன.

இந்த விதி­மு­றைப்­படி, இடர்­பாட்டு கடன் தவ­ணை­யைச் செலுத்த, ஒரு நாள் தவ­றி­னால் கூட, ஒரு நிறு­வ­னத்­தின் மீது, வங்கி, கடன் சீர­மைப்பு நட­வ­டிக்­கையை துவக்­க­லாம்; அதில், 180 நாட்­க­ளுக்­குள் தீர்வு காணத் தவ­றி­னால், திவால் நட­வ­டிக்கை எடுக்­க­லாம். எனவே, ‘புதிய விதி­முறை கார­ண­மாக, ஏரா­ள­மான சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் திவா­லாக நேரி­டும்; வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­வது குறை­யும்’ என, மத்­திய அர­சின் முதன்மை பொரு­ளா­தார ஆலோ­ச­கர் சஞ்­சீவ் சன்­யால், நிதி­ அமைச்­ச­கத்­தி­டம் தெரி­வித்­தார்.

ஆனால், ‘புதிய விதி­மு­றை­கள், வங்­கி­க­ளின் வாராக் கடன் பிரச்­னையை குறைத்து, அவற்­றின் செயல்­பா­டு­களில் ஒழுங்­கு­மு­றையை ஏற்­ப­டுத்­தும்’ என, பார்லி., குழு­வி­டம், ரிசர்வ் வங்கி விளக்­கம் அளித்­தது. இத­னால், மத்­திய அர­சுக்­கும், ரிசர்வ் வங்­கிக்­கும் இடையே உர­சல் உண்­டா­னது.

இந்­நி­லை­யில், ரிசர்வ் வங்கி, விதி­மு­றை­களை தளர்த்த உள்­ள­தாக, தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ரிசர்வ் வங்­கி­யின் புதிய விதி­மு­றை­யால், குறிப்­பாக, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மேற்­கொண்டு, கடன் பெற முடி­யாத நிலையை உரு­வாக்கி விடும். வங்­கி­களும், அவற்­றுக்கு மீண்­டும் கடன் வழங்­காது.

அத­னால், நிறு­வ­னங்­க­ளின் வர்த்­த­கம், நிதி­யா­தா­ரம் ஆகி­யவை பாதிக்­கப்­பட்டு, தன்­னிச்­சை­யாக திவால் நிலைக்கு ஆளாக நேரும். இத­னால், மத்­திய அரசு மற்­றும் வங்­கி­கள் தரப்­பில், ஒரு நாள், ‘கெடு’வை தளர்த்த, ரிசர்வ் வங்­கிக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து, இடர்பாட்டு கடன் தவணை செலுத்த தவ­று­வோ­ருக்­கான கெடு, ஒரு நாளில் இருந்து ஒரு மாத­மாக உயர்த்­து­வது குறித்து, ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.

இடர்­பாட்டு கடன் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பாக, அனைத்து வங்­கி­க­ளின் இயக்­கு­னர் குழுக்­க­ளின் கொள்­கை­களை வெளி­யிட வேண்­டும் என­வும், ரிசர்வ் வங்­கி­யின் புதிய விதி­முறை தெரி­விக்­கிறது.இது, வங்கி இயக்­கு­னர் குழுக்­க­ளி­டையே, மாறு­பட்ட கொள்­கை­கள் உரு­வாக வழி வகுத்து, வங்கி அமைப்­பின் கடன் மீட்பு நட­வ­டிக்­கையை பாதிக்­கும் என்­ப­தால், பொது கொள்­கையை உரு­வாக்­கு­வது குறித்­தும் ரிசர்வ் வங்கி ஆலோ­சித்து வரு­கிறது. அத­னால், இந்த விதி­மு­றை­யி­லும் மாற்­றம் இருக்­கும் என, தெரி­கிறது.

சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்­பில்­லா­ம­லும், அதே­ச­ம­யம், வாராக் கடனை குறைப்­ப­தற்­கான புதிய விதி­மு­றை­க­ளின் தன்­மையை நீர்த்து போகச் செய்­யாத வகை­யி­லும், ரிசர்வ் வங்­கி­யின் நிலைப்­பாடு இருக்­கும். இது குறித்த அறி­விப்பு, இம்­மாத இறு­தி­யில் வெளி­யா­கும் எனத் தெரி­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)