பதிவு செய்த நாள்
18 ஏப்2018
00:19
புதுடில்லி : ‘இந்தியா, ஆண்டுக்கு, 80 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வங்கி, தெற்காசிய பொருளாதாரம் குறித்த அரையாண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. ‘வேலைவாய்ப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமா...’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக அதிகரிக்கும். இது, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 7.5 சதவீதமாக உயரும். தெற்காசிய பிராந்தியத்தில், மிக வேகமான பொருளாதார வளர்ச்சி உள்ள நாடாக, இந்தியா மீண்டும் உருவெடுத்துள்ளது.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து, இந்தியா மீண்டு விட்டது தான் இதற்கு காரணம். இந்தியா, வேலை வாய்ப்பு விகிதத்தை தக்க வைத்துக் கொள்வதன் மூலம், சிறப்பான வளர்ச்சி காண முடியும். அதற்கு, ஆண்டுக்கு, 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் முடுக்கி விடப்பட வேண்டும்.
தனியார் முதலீடு மற்றும் தனியார் நுகர்வில் நிலவிய சுணக்கத்தில் இருந்து விடுபட்டு, ஸ்திரமான வளர்ச்சியை நோக்கி, இந்தியா நடைபோட துவங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|