‘5ஜி’ தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு‘5ஜி’ தொழில்நுட்பம் உயர்மட்ட குழு ஆய்வு ... புதிய சாதனை புரிய தயாராகும் டி.சி.எஸ்.,; சந்தை மூலதனம் ரூ.6.60 லட்சம் கோடியை நெருங்குகிறது புதிய சாதனை புரிய தயாராகும் டி.சி.எஸ்.,; சந்தை மூலதனம் ரூ.6.60 லட்சம் கோடியை ... ...
சிறிய நிறுவனங்களுக்கு விதியை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
00:36

புதுடில்லி : ‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் கடன் தொடர்­பான விதி­மு­றையை தளர்த்த வேண்­டும்’ என, ரிசர்வ் வங்­கிக்கு, மத்­திய அரசு கோரிக்கை விடுத்­துள்­ளது.

ரிசர்வ் வங்கி விதி­யின்­படி, ஒரு நிறு­வ­னம், 90 நாட்­கள் வரை, வங்­கி­யில் வாங்­கிய கடனை திரும்­பச் செலுத்­தா­மல் இருந்­தால், அது, வாராக் கடன் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்டு விடும். இத்­த­கைய நிறு­வ­னத்­திற்கு, வங்கி மேற்­கொண்டு கடன் வழங்­காது. இத­னால், நிறு­வ­னங்­கள் தொழிலை தொடர முடி­யா­மல், முடங்­கும் நிலை உண்­டா­கும். இத்­த­கைய நிலைக்கு, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் ஆளா­வதை தவிர்க்­கும் பொருட்டு, அவற்­றுக்­கான, வாராக்­க­டன் தொடர்­பான விதி­மு­றையை தளர்த்த வேண்­டும் என, ரிசர்வ் வங்­கிக்கு, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை கூடு­தல் செய­லர், ராம் மோகன் மிஸ்ரா கூறி­ய­தா­வது: ரிசர்வ் வங்கி விதி­மு­றைப்­படி, 90 நாட்­கள் வரை கடனை திரும்­பச் செலுத்­தா­மல் இருந்­தால், அந்த கடன் வாராக்­க­டன் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­ப­டு­கிறது. இதை, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, 180 நாட்­க­ளாக உயர்த்த வேண்­டும் என, ரிசர்வ் வங்­கி­யி­டம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் துறை செய­லர், ஏ.கே.பாண்டா, ரிசர்வ் வங்கி அதி­கா­ரி­க­ளு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ளார்.

குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் புரி­யும் தொழில்­களில், உட­ன­டி­யாக பணம் கிடைப்­ப­தில்லை. சந்தை சார்ந்த தொழில்­களில், எதிர்­பா­ராத சுணக்­கங்­கள் ஏற்­ப­ட­வும் வாய்ப்­புண்டு. அத்­த­கைய தரு­ணங்­களில் கிடைக்­கும், வங்­கிக் கடன் தான், தொழில் முடங்­கா­மல், தொடர்ந்து இயங்க கைகொ­டுக்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)